மேலும் அறிய

Aditya L1: லெக்ராஞ்சியன் 1 புள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? ஆதித்யா எல்1-க்கு உள்ள பெரிய ஆபத்து என்ன?

சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை நிலைநிறுத்த லெக்ராஞ்சியன் 1 புள்ளியை, இஸ்ரோ தேர்ந்து எடுத்தது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை நிலைநிறுத்த லெக்ராஞ்சியன் 1 புள்ளியை, இஸ்ரோ தேர்ந்து எடுத்தது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம்:

நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக,  ஆதித்யா எல்1 எனும் விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  100 நாட்கள் பயணிக்கும் அந்த விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று லெக்ராஞ்சியன் 1 (L1) என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது பூமியிலிருந்து நிலா அமைந்து இருக்கும் தூரத்த விட 4 மடங்கு அதிகம் ஆகும். அந்த இடத்தில் இருந்து தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆதித்யா எல்1 விண்கலம் சூரியன் தொடர்பான ஆய்வுகளை செய்ய உள்ளது.

லெக்ராஞ்சியன் புள்ளி என்றால் என்ன?

இரண்டு பெரும் வான்பொருட்களின் சுற்றுப்பாதைகளின் இடையே, அவற்றின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய சூழல் நிலவும் ஒரு புள்ளி தான் லெக்ராஞ்சியப் புள்ளி என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில்,  இரு பெரும் வான்பொருட்களின் ஈர்ப்புவிசைகளின் கூட்டுவிசையால்,  சிறுபொருள் அவற்றைச் சுற்ற தேவையான மையநோக்கு விசையை பெறுகிறது. சூரியனை சுற்றி ஐந்து லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன. அவற்றில்  எல்1, எல்2 மற்றும் எல் 3 ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்பதை பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெக்ராஞ்சி என்பவர் கண்டறிந்தார். சூரியன் மட்டுமின்றி வியாழன் போன்ற மற்ற கிரகங்களுக்கும் இதுபோன்ற லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன.

லெக்ராஞ்சியப் புள்ளி 1 தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

இந்நிலையில். லெக்ராஞ்சியப் புள்ளி 1 தேர்ந்து எடுக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, நாசாவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா விளக்கியுள்ளார். அதன்படி, “லெக்ராஞ்சியப் புள்ளி என்பது இது மிகவும் நிலையான புள்ளி. இது பூமி மற்றும் சூரியன் இரண்டின் ஈர்ப்பு விசைக்கு இடையே சமமான தொலைவில் உள்ளது. எனவே எல்1 புள்ளியில் இருந்து எந்தவொரு சூழலிலும் ஆதித்யா எல்1 செயற்கைகோள் தொடர்ந்து  சூரியனை கண்காணிக்கலாம். அதாவது கிரகணம் போன்ற எந்தவொரு வானியல் நிகழ்வும் ஆதித்யா எல் 1 பார்வையிலிருந்து சூரியனை விலக்க முடியாது. இதன் மூலம், எந்தவொரு சூழலிலும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்களை ஆதித்யா எல்1 சேகரிக்கும். 

சவால் என்ன?

அதேநேரம், இந்த திட்டத்தில் எல்-1 புள்ளியை நோக்கி பயணிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவை பூமிக்கு அருகில் உள்ளது. ஆனால், சூரியன் அப்படி கிடையாது. அதுதொடர்பான ஆய்விற்காக ஆதித்யா எல்.1 விண்கலம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரம் பயணிக்க உள்ளது.  சூரியனிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் கதிர்வீச்சிலிருந்து செயற்கைக்கோளை காப்பாற்றுவதே சவாலானதாக இருக்கும். அதை நம்மால் சாதிக்க முடிகிறதா என்பதை நமது தொழில்நுட்பம் காட்டும்” என்று மிலா மித்ரா விளக்கியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget