மேலும் அறிய

Pegasus Spyware Probe: பெகசஸ் விவகாரம் : விசாரணை குழு அமைக்க மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு..!

பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களான என்.ராம் மற்றும் சசி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்

இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக, கடந்த வாரம் உலகின் முன்னணி பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்பட 17 பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் என், ராம் மற்றும் சசிகுமார் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

“இந்த ராணுவ தரப்பு உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இத்தகைய வெகுஜன கண்காணிப்பு பல அடிப்படை உரிமைகளைம சுருக்கி, நமது ஜனநாயக அமைப்பின் முக்கிய தூண்களாக செயல்படும் சுயாதீன நிறுவனங்களுக்குள் ஊடுருவி, ஸ்திரத்தன்மையை தாக்கும் முயற்சியை குறிக்கிறது.


Pegasus Spyware Probe: பெகசஸ் விவகாரம் : விசாரணை குழு அமைக்க மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு..!

 

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு தங்கள் பதிலில், பெகாசஸ் உரிமங்களைப் பெறுவதை திட்டவட்டமாக நிராகரிக்கவில்லை என்பதையும், இதுதொடர்பாக மிகவும் கடுமையாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான மற்றும் சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெகாசஸ் உளவு என்பது தகவல் தொடர்பு, அறிவுசார் மற்றும் தகவல் தனியுரிமை மீதான நேரடித்தாக்குதல் ஆகும். மேலும், இந்த சூழல்கள் தனியுரிமையின் அர்த்தமுள்ள பயிற்சியை விமர்சன ரீதியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது.  

இதில் குறிப்பாக பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டது, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இது சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமையை தீவிரமாக சுருக்குகிறது. கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு என்பது பொது அவசரகால நிகழ்வுகளில் அல்லது பொது பாதுகாப்பின் நலன்களில் மட்டுமே நியாயப்படுத்தப்படுகிறது. இந்த கட்டாய நிபந்தனைகள் ஏதும் தற்போதைய வழக்கில் என்பதால், கண்காணிப்ப என்பது சட்டவிரோதம்.


Pegasus Spyware Probe: பெகசஸ் விவகாரம் : விசாரணை குழு அமைக்க மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு..!

இந்தியாவில் பெகசஸ் ஸ்பைவேரை எந்தளவிற்கு, எப்படி எல்லாம் பயன்டுத்தி உள்ளனர் எனபதை கண்டறிய உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு பெகசஸ் தொழில்நுட்பத்தில் மத்திய அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இந்த விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தனர். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை தயாரித்த இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகசஸ் தொழில்நுட்பத்தை சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களிடம் மட்டுமே விற்பனை செய்வோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. 

இதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மேற்கு வங்க அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மதன்பிலோகுர் தலைமையில் விசாரணைக்குழுவை நேற்று அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget