மேலும் அறிய

Cyber Crime: உஷார்.. திருடப்படும் தரவுகள்.. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சர்வதேச அளவில் சைபர் தாக்குதலுக்காளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இணைய மோசடி:

இணைய வசதி காரணமாக மனிதனின் வாழ்வு எவ்வளவு மேம்பட்டு இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளும் நன்மைக்கு நிகரான அளவிற்கு வளர்ந்துள்ளன. வங்கிக் கணக்கு முதற்கொண்டு தனிமனித தரவுகள் வரை அனைத்தும் ஒற்றை பாஸ்வேர்டுக்குள் அடங்கிப் போக, அவற்றை திருடுவதும் டிஜிட்டல் உலகில் மிகவும் எளிமையான காரியமாக மாறியுள்ளது. ஊடகங்களில் நாள்தோறும் காணும், இணைய மோசடி சம்பவங்களே இதற்கு ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில், சைபர் கிரைம் தொடர்பாக, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் அமைப்பின் ஆய்வறிக்கை:

இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான குரூப் ஐபி நடத்திய ஆய்வின்படி, ஒருங்கிணைக்கப்பட்ட மோசடி பரப்புரை மூலம் கடவுச்சொற்களைத் திருடும் சைபர் குற்றவாளிகளின், சிண்டிகேட் சம்பந்தப்பட்ட உலகளாவிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 111 நாடுகளின் பட்டியலில்,  இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

ரஷ்யாவின் பங்கு?

ஆய்வறிக்கையின் படி, 34 ரஷ்ய மொழி பேசும் சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் வழியாக தகவல் திருடும் மால்வேர்களை விநியோகித்து வருகின்றனர். அதன்மூலம் போலியான குறுஞ்செய்தி மற்றும் மெயில் ஆகியவற்றை அனுப்பி தகவல்கள் திருடப்படுகின்றன. இன்போ ஸ்டீலர் எனப்படும் இந்த யுக்தி கொண்டு பாஸ்வேர்ட்கள், கேமிங் கணக்குகள், மின்னஞ்சல் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், கிரிப்டோ வாலட் தரவு மற்றும் பயனரின் செயல்பாட்டு தரவுகளை சேகரிக்கும் குக்கீ கோப்புகள் திருடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 கோடி குக்கீ கோப்புகள் திருடப்பட்டுள்ளன. திருடப்படும் தரவுகள் டார்க் வெப் சந்தைகளில் பணத்திற்காக விற்கப்படுகின்றன. இந்த தரவுகள் மூலம் பாஸ்வேர்ட் இன்றியே, ஒருவரின் சமூக வலைதள மற்றும் வங்கிக் கணக்குகளை பிறர் அணுக முடியும் என கூறப்படுகிறது. 

குறிவைக்கப்படும் பாஸ்வேர்டுகள்:

குக்கீ கோப்புகளைத் தவிர, சைபர் குற்றவாளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பயனர்களிடமிருந்து லட்சக்கணக்கான பாஸ்வேர்ட்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிதி உள்நுழைவு தரவுத் தொகுப்புகள் திருடப்பட்டுள்ளன. நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ளன.  திருடப்பட்ட தரவு மற்றும் அட்டை விவரங்களின் மதிப்பு டார்க் வெப் சந்தையில் சுமார் ரூ.48 கோடி  என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முதல் மூன்று இடங்களில் இந்தியா:

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக  சைபர் தாக்குதலால்  பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளது. உலகளவில், 2022ல் அடிக்கடி சைபர் தாக்குதலுக்கு உள்ளான முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ஜெர்மனி மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. டெலிகிராம் குழுக்களின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் கடைசி 10 மாதங்களில் திருட்டு மால்வேர் 19,249 சாதனங்களை பாதித்தது, அதே நேரத்தில் 2022 இன் முதல் ஏழு மாதங்களில் எண்ணிக்கை 53,988 ஆக அதிகரித்து இருந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget