மேலும் அறிய

Facebook India Head Resigns: பேஸ்புக் இந்தியப் பிரிவு தலைவர் அஜித் மோகன் ராஜினாமா - காரணம் இதுதான்!

சமூக வலைதளமான பேஸ்புக்கின் இந்தியப் பிரிவுக்கான தலைவர் அஜித் மோகன், மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சமூக வலைதளமான பேஸ்புக்கின் இந்திய பிரிவுக்கான தலைவர் அஜித் மோகன், வேறு ஒரு நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

அஜித் மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிர்வாக இயக்குநராக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு சேர்ந்தார். இவரது பதவிக் காலத்தில் இன்ஸ்கிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் 20 கோடி இந்தியப் பயனர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதுகுறித்து மெட்டா நிறவனத்தின் துணைத் தலைவர் நிகோலா மென்டல்சோன் வெளியிட்ட அறிக்கையில், "மற்றொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மெட்டா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றா பேஸ்புக்கின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் நிர்வாக இயக்குநராக சேர்வதற்கு முன் ஸ்டார் குழுமத்தின் ஹாட்ஸ்டாரில் தலைமைச் செயல் அதிகாரியாக அஜித் மோகன் 4 ஆண்டுகள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்களின் பெரும்பாலான ஃபாலோவர்ஸை இழந்து வருவதாக பேஸ்புக் பயனாளர்கள் புகார் தெரிவித்து வருவது பிரச்னையாக வெடித்தது. 

கிட்டத்தட்ட 119 மில்லியன் ஃபாலோவர்களை மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான மார்க் ஜுக்கர்பெர்க் இழந்தார். இதன் காரணமாக, அவரை பின்தொடர்பவரின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக குறைந்தது.

இதேபோல், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஹனி ட்ராப்பிங் மற்றும் மால்வேர் மூலம் நடிகர்கள், அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் சாதனங்களில் குறிப்பாக இந்தியாவில் உள்ள மக்களை குறிவைத்து, பாகிஸ்தான் அரசு நிகழ்த்தும் மோசமான  இணைய உளவு நடவடிக்கையை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா  முறியடித்தது.

இந்த உளவு நடவடிக்கை இந்தியாவைத் தவிர, பாகிஸ்தானில் உள்ள ஹேக்கர்கள் குழு , இது பாதுகாப்பு துறையில் APT36 என அறியப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ளவர்களை குறிவைத்ததாக மெட்டாவின் காலாண்டு 'எதிர்ப்பு அச்சுறுத்தல் அறிக்கை' தெரிவித்தது.

"எங்கள் விசாரணை இந்த செயல்பாட்டை பாகிஸ்தானில் உள்ள அரசுடன் செயல்படுபவர்களுடன் இணைக்கிறது" என்று மெட்டா குறிப்பிட்டிருந்தது. அந்தக் குழுவின் செயல்பாடு தொடர்ந்து இருந்ததாகவும் மேலும் இண்டர்நெட் வழங்கும் இமெயில், ஃபைல் ஹோஸ்டிங், சோஷியல் மீடியா எனப் பல்வேறு தளங்களில்  இது விரவி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 "ஆன்லைனில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்களைக் குறிவைத்து APT36 குழு பல்வேறு தீங்கிழைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களின் சாதனங்களை மால்வேர் மூலம் பாதிக்கிறது. அவர்கள் மார்ப்பிங் போன்ற போலியான பயன்பாடுகளின் கலவையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்கும் சாதனங்களை இலக்காகக் கொண்டு தங்கள் பொருளை விநியோகிக்கிறார்கள்," என்று மெட்டா எச்சரித்தது.

APT36 கற்பனையான நபர்களைப் பயன்படுத்தியது. சட்டப்பூர்வ மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் கவர்ச்சிகரமான இளம் பெண்கள் அல்லது காதல் தொடர்பைத் தேடும் இராணுவப் பணியாளர்கள் குறிவைத்த நபர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும். பிறகு தங்கள் உருவாக்கத்தை அவர்களிடம் திணிக்கும். "இந்த டொமைன்களில் சில, புகைப்படப் பகிர்வு இணையதளங்கள் அல்லது பொதுவான ஆப் ஸ்டோர்களாக மாறியுள்ளன, மற்றவை Google Play Store, Microsoft's OneDrive மற்றும் Google Drive போன்ற உண்மையான நிறுவனங்களின் டொமைன்களை ஏமாற்றுகின்றன" என்று மெட்டா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Embed widget