மேலும் அறிய

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

வடக்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி கோஸ்ட் 2002ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக இருந்தது. அங்கு இருந்த கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரியளவில் போர் இருந்தது வந்தது.

உலகில் அதிக மக்களால் பின் தொடரப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து விளையாட்டு தான். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாக உள்ளனர். எப்போதும் விளையாட்டு மூலம் ஒரு சமூக பிரச்னையை கொண்டு சென்றால் எளிதில் நிறைய மக்களை சென்று அடையும். அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது  சில நாட்களுக்கு முன்பு போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை தள்ளிவைத்தார். அத்துடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் பக்கத்தில் வைத்தார். அவரின் இந்தச் செயல் சமூகத்தில் மட்டுமல்லாமல் பங்குச்சந்தையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவரின் இந்தச் செயலுக்கு பிறகு பங்குச்சந்தையில் கோகோ கோலாவின் பங்குகளின் மதிப்பு 29 ஆயிரம் கோடி வரை குறைந்தது. இது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் கால்பந்து வீரர் ஒருவர் சமூக பிரச்னையை கையில் எடுப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த டிடியர் ட்ரோக்பாவின் செயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

வடக்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி கோஸ்ட் 2002ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக இருந்தது. அங்கு இருந்த கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரியளவில் போர் இருந்தது வந்தது. தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிகமாக நடைபெற்று வந்தது. 2004ஆம் ஆண்டு வரை நீடித்த அந்தச் சண்டை பின்னர் வடக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும் தெற்கு பகுதியை அரசும் தனது கட்டுப்பாட்டிற்கு வைத்திருந்தன. 2005ஆம் ஆண்டு மீண்டும் இருவருக்கும் இடையே போர் ஏற்படும் நிலை உருவானது. அந்த சமயத்தில் ட்ரோக்பாவின் செயல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு ஆகிய இருவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

2004ஆம் ஆண்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் செல்சி அணிக்காக விளையாடும் வாய்ப்பை ட்ரோக்பா பெற்றார். அப்போது முதல் ஐவரி கோஸ்ட் மட்டுமல்லாமல் உலக கால்பந்து வரலாற்றில் மிகவும் பிரபலம் அடைந்தார். 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாக விளையாடி இருந்த ஐவரி கோஸ்ட் அணி 2 இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. இதனால் உலகக் கோப்பைக்கு முன்னேற கேமரூன் மற்றும் எகிப்து இடையேயான போட்டி டிராவில் முடிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

ஐவரி கோஸ்ட் அணியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அப்போட்டி டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு ஐவரி கோஸ்ட் முன்னேறியது. இந்த தருணத்தின் போது தன்னுடைய சக வீரர்களுடன் இருந்து பேசிய ட்ரோக்பா, “ஐவரி கோஸ்ட் நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்களே, நம் நாட்டின் வடக்கு,கிழக்கு,தெற்கு, மத்திய ஆகிய அனைத்து பகுதிகள் மக்களும் ஒன்று சேர்ந்து விளையாடி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதிப் பெற முடியும் என்பதை இன்று நாம் நிரூபித்துள்ளோம். இந்த கொண்டாட்டம் நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே உங்களுடைய கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆயுதங்களை கைவிடுங்கள். நல்ல வலம் கொண்ட நமது நாடு போரில் சிக்கி தவிக்காமல் ஆயுதங்களை கைவிட்டு தேர்தலை நடத்துங்கள் ” எனக் கூறி கால்களில் விழும் போல வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது அப்போது நடைபெற்ற கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கும் இடையேயான சண்டையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

அவர் இத்துடன் நிற்கவில்லை. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஐவரி கோஸ்ட் 4 தோல்விகளுடன் முதல் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அந்த அணியின் செயல்பாட்டை நாடு முழுவதும் கொண்டாடியது. மீண்டும் இந்த பிரச்னையை கையில் எடுத்த ட்ரோக்பா 2007ஆம் ஆண்டு மடகாஸ்கர் அணியுடன் நடைபெற இருந்த நட்பு ரீதியிலான போட்டியை வடக்கு பகுதியில் வைக்க வேண்டும் என்று கூறினார். ஐவரி கோஸ்ட் நாட்டின் வடக்குப் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கு சென்று விளையாட வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். 

 

பின்னர் ராணுவ பாதுகாப்புடன் அங்கு சென்ற ஐவரி கோஸ்ட் கால்பந்து அணி 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இந்தப் போட்டி முழுவதும் ட்ரோக்பா அவ்வப்போது ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று உணர்த்தி கொண்டே இருந்தார். இது அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தன்னுடைய கோரிக்கையின் மூலம் முழுமையாக போரை நிறுத்தவில்லை என்றாலும் அதில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 


‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

இது போன்ற சம்பவங்கள் மூலம் கால்பந்து வீரர்கள் சிலர் அதை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் சமூக பிரச்னைகளை முன்னெடுக்கும் நல்ல கருவியாக பார்க்கின்றனர் என்பது தெரிகிறது. 2018ஆம் ஆண்டு உடன் ட்ரோக்பா கால்பந்து விளையாட்டில் ஓய்வு பெற்று இருந்தாலும் அவருடைய செயல் எப்போதும் மக்கள் மனதில் நின்று கொண்டு வருகிறது. 

மேலும் படிக்க: ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Embed widget