மேலும் அறிய

Olie Robinson on Twitter : அப்படி என்ன ட்வீட் செய்தார் ஒலி ராபின்சன் - சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தடை ஏன்?

இனவெறி மற்றும் பாலியல் ரீதியிலான கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்த ராபின்சன் மீது நன்னடத்தை நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராபின்சன் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இனவெறி மற்றும் பாலியல் ரீதியிலான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த காரணத்தால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ராபின்சன் நீக்கப்படுகிறார், அவர் மீது விசாரணை மேற்கொள்ள உள்ளோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்த நிலையில், அந்த முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 42 ரன்கள் விளாசி, 7 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை இக்கட்டில் இருந்து மீட்டவர் இங்கிலாந்து வீரர் ஒலி ராபின்சன். இவரின் சிறந்த ஆட்டத்தை பலர் பாராட்டிவந்த நிலையில், அவர் முன்னொரு காலத்தில் ட்விட்டரில் பதிந்த சில கருத்துக்கள் அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அப்படி என்ன பதிவிட்டார் ராபின்சன் ? 

2012-ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னுடைய முஸ்லீம் நண்பன் ஒரு வெடிகுண்டு" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் 2013-ஆம் ஆண்டு "வீடியோ கேம் விளையாடும் பெண்கள் பாலியல் உறவு அதிகமாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். இது போன்று பாலியல் ரீதியிலான மற்றும் இனவெறியை வெளிப்படுத்தும் விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்னர் பதின்பருவத்தின்போது அவர் பதிந்த பதிவுகள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Olie Robinson on Twitter : அப்படி என்ன ட்வீட் செய்தார் ஒலி ராபின்சன்  - சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தடை ஏன்?

அதன் காரணமாகத்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நன்னடத்தை நடவடிக்கை மேற்கொள்ள ராபின்சன் நீக்கியுள்ளது. இந்த பதிவுகள் குறித்து மனம் திறந்துள்ள ராபின்சன் "என் வாழ்வின் மிக முக்கியமான நாளில், இது போன்ற பாலியல் மற்றும் இனவெறி கருத்துக்களை பதிவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன். நான் அப்படிப்பட்டவன் இல்லை" என தெரிவித்துள்ளார். மேலும் "என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் வருந்துகிறேன், நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்துள்ளேன், சரியான மனநிலையில் அந்த நேரத்தில் நான் இல்லை, எனது செயல் மன்னிக்க முடியாதவை" என்றும் ராபின்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிய : ”மூணு மேச்சா வெச்சு இருக்கனும்” : இந்தியாவுக்கு பின்னடைவு எனச்சொல்லும் யுவராஜ் சிங்!

"ஒரு காலத்தில் நான் செய்துள்ள யோசனையற்ற செயல், இன்று என் கிரிக்கெட் வாழ்க்கையை களங்கப்படுத்திவிட்டது. கடைசி சில வருடம் கடுமையாக உழைத்து இந்நிலைக்கு வந்தேன், என் கருத்து மூலம் நான் காயப்படுத்திய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ராபின்சன் தனது மன்னிப்பை கோரியுள்ளார். இந்நிலையில் இளம் வயதில் அறியாமல் செய்த காரியத்திற்கு இன்று நடவடிக்கை எடுப்பதா என சிலர் ராபின்சனுக்கு ஆதரவாகவும், 18 வயது ஒன்றும் விவரம் தெரியாத வயதில்லை அதனால் நடவடிக்கை அவசியம் என சிலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget