![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Champions trophy: துபாய்க்கு மாற்றப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடத்தப்படும் என்ற நிலையில் துபாயில் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![Champions trophy: துபாய்க்கு மாற்றப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்? no champions trophy in pakistan 8 team tournament likely to take place in dubai Champions trophy: துபாய்க்கு மாற்றப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/93290b723be1f3512133044828e087ef1701167760270732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி-2025:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தொடரை பாகிஸ்தான் நாட்டில் நடத்துவதற்கான் சூழல் நிலவியது. இதனிடையே, பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெறாது என்றும் துபாயில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐசிசி நடத்தும் தொடர்களில் முக்கியமானது சாம்பியன்ஸ் ட்ராபி தொடர். அதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
பாகிஸ்தானில் நடத்தப்படுமா?
இதையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக கூறப்பட்டது. அதேநேரம் ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.
ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதனிடையே, பாகிஸ்தான் நாட்டில் இந்தியா விளையாடச் செல்லவில்லை என்றால், கடந்த முறை நடைபெற்ற ஆசிய கோப்பையைப் போல் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த முறை நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது இந்திய அணி விளையாடிய போட்டிகள் எல்லாம் இலங்கையில் தான் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தான் தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் துபாயில் நடைபெறாலம் என்றும் தகவல்கள் வெளியாகிவருகிறது. அதேபோல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதித்துள்ளனர். அதோடு, எந்தவொரு சூழ்நிலையிலும் ஐசிசி போட்டியில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியதாக தெரிகிறது. அதே நேரம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ODI World Cup 2027: இன்னும் நான்கு ஆண்டுகளில் உலகக் கோப்பைத் திருவிழா! எந்த நாடு நடத்துகிறது..?
மேலும் படிக்க: KL Rahul: உலகக் கோப்பை தோல்வி; "இன்னும் வலிக்கிறது...” - இதயம் நொறுங்கிய கே.எல்.ராகுல்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)