மேலும் அறிய

ODI World Cup 2027: இன்னும் நான்கு ஆண்டுகளில் உலகக் கோப்பைத் திருவிழா! எந்த நாடு நடத்துகிறது..?

இந்தியாவில் உலகக்கோப்பை திருவிழா முடிந்த நிலையில், உலகக் கோப்பை 2027 எப்போது? எங்கு நடக்கிறது? என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.

உலகக் கோப்பை 2023 போட்டியானது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதன்மூலம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பையை இந்திய அணியின் கைகளில் காண இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

2027 உலகக் கோப்பை:

இந்தநிலையில், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இதன்மூலம் மூன்று நாடுகள் இணைந்து அடுத்த உலகக் கோப்பையை நடத்தும். 

ஆப்பிரிக்க கண்டத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2003 உலகக் கோப்பை போட்டியானது ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து போட்டியை நடத்தியது. அந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் லீக் ஸ்டேஜிலிருந்து வெளியேறிய நிலையில், கென்யா அணி மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரையிறுதி வரை சென்றது. அரையிறுதியில் இந்திய அணியிடம் கென்யா தோல்வியை சந்திக்க நேரிட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்கு மறக்க முடியாதது. 1983-க்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  அப்போதும் இந்தியா அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. 

எந்தெந்த அணிகள் தகுதி..?

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே 2027 உலகக் கோப்பையை விளையாடுவது உறுதியான நிலையில், போட்டியை நடத்தும் நமீபியா உலகக் கோப்பை தகுதிசுற்று சுற்று போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியும். 

எத்தனை அணிகள் பங்கேற்கும்..? 

அடுத்த உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கும். இதில் இரண்டு அணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நேரடியாக தகுதிபெறுவார்கள். மீதமுள்ள நான்கு அணிகளும் தகுதிச் சுற்று போட்டிகள் மூலம் உலகக் கோப்பை 2027ல் அடியெடுத்து வைக்கும். 

2027 உலகக் கோப்பையில் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இங்கு ரவுண்ட் ராபின் கட்டத்திற்குப் பிறகு, இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அதாவது இரண்டாவது சுற்றில் 6 அணிகள் இருக்கும். ஒரு குழுவின் அணி மற்ற குழுவின் அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதன்படி, இந்த சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் ஐந்து போட்டிகள் இருக்கும். இந்த நிலையில் இரண்டு அணிகள் வெளியேற்றப்பட்டு பின்னர் அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget