மேலும் அறிய

Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின்.. வீடியோ

லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார்.

தடகள உலகில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஷ்வின் ஆல்ட்ரின். நீளம் தாண்டுதலில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை இவர் வென்றுள்ளார். அத்துடன் 20 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் ஜெஷ்வின் தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

இந்நிலையில் லிச்சென்ஸ்டீன் நாட்டில் நடைபெற்ற கோல்டன் ஃபிளை சீரிஸ் தொடரில் நீளம் தாண்டுதல் போட்டியில் இவர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் இவர் 8.12 மீட்டர் தூரம் தாண்டினார். அத்துடன் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “லிச்சென்ஸ்டீன் நகரில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் நான் 8.12 மீட்டர் நீளம் தாண்டினேன். இந்த ஆண்டு சீசனில் இன்னும் ஒரு சுற்று போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த இடத்திற்கு வர உதவிய இந்திய தடகள சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. தொடர்ந்து முன்னேறி கொண்டே இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். மீண்டும் 8 மீட்டரை தாண்டி நீளம் தாண்டிய ஜெஷ்வின் ஆல்ட்ரீனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முதலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏனென்றால் இவர் மோசமான ஃபார்மில் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தகுதி போட்டியில் இவர் 7.93 மீட்டர் நீளம் தாண்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்க இந்திய தடகள சங்கம் முடிவு எடுத்தது. 

அதன்பின்னர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற ஜெஷ்வின் ஆல்ட்ரின் தகுதிச் சுற்றில் 7.78 மீட்டர் நீளம் தாண்டினார். அத்துடன் தகுதிச் சுற்றில் 9வது இடத்தை பிடித்தார். அது கடும் ஏமாற்றமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் 8 மீட்டரை தாண்டி குதித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஷ்வின் ஆல்ட்ரின் தன்னுடைய சொந்த சிறப்பான தூரமாக 8.37 மீட்டரை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget