![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
IPL Mega Auction 2022 : போட்டா போட்டி.. தமிழக வீரர் ஷாரூக் கானை தூக்கிய பஞ்சாப் ! சிஎஸ்கே மீண்டும் சொதப்பல்
IPL Mega Auction 2022 : ஐபிஎல் ஏலத்தி தமிழ்நாடு வீரர் ஷாரூக் கானை எடுக்க சென்னை ,பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
![IPL Mega Auction 2022 : போட்டா போட்டி.. தமிழக வீரர் ஷாரூக் கானை தூக்கிய பஞ்சாப் ! சிஎஸ்கே மீண்டும் சொதப்பல் IPL Mega Auction 2022 : TN player Shahrukh Khan bought by Punjab Kings IPL Mega Auction 2022 : போட்டா போட்டி.. தமிழக வீரர் ஷாரூக் கானை தூக்கிய பஞ்சாப் ! சிஎஸ்கே மீண்டும் சொதப்பல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/12/b89ac4b336f3df20c204b920f6784ff6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு வீரர் ஷாரூக் கானிற்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.இறுதியில் 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)