மேலும் அறிய

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக ஆடி வரும் ரஹானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது, இளம் வீரர்களுக்கான வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 345 ரன்களை அடித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுமாராக ஆடி 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பியிருந்தாலும் ரஹானேவை மட்டும் தனியாக குறிப்பிட்டு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், ரஹானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை ஆடி வருகிறார். இளம் வீரர்கள் ஏகப்பட்ட பேர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ரஹானே தொடர்ந்து அணியில் நீடிப்பாரா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
 
அஜிங்கியா ரஹானே இந்திய வீரர்களிலேயே கொஞ்சம் அபூர்வமானவர். மற்ற இந்திய வீரர்கள் உள்ளூரில் கிரிக்கெட் ஆடுவதை அதிகம் விரும்பிய நேரத்தில் வெளிநாட்டு மைதானங்களில் அதிகம் ஆட விரும்பியவர். அவருடைய ரெக்கார்டுகளை எடுத்துப்பார்த்தால் இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக ரன்களை எடுத்திருப்பார். ஸ்பின்னை விட வேகப்பந்து வீச்சையே சிறப்பாக சமாளித்திருப்பார். இதனாலயே ரஹானே ஒரு ஸ்பெசலான வீரராக பார்க்கப்பட்டார். வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக பார்க்கப்பட்டார்.


தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
ஆனால், அவரது சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ்கள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை. அளவுக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்ட பிறகும் ஃபார்முக்கு திரும்பாமல் சொதப்பி கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 இன்னிங்ஸ்களில் ஆடி 683 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 24.4 மட்டுமே. 2020 லாக்டவுணுக்கு பிறகு இந்தியா ஆடிய முதல் தொடரான ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ரஹானேவின் பெர்ஃபார்மென்ஸை பார்த்தாலே அவரின் ஃபார்ம் அவுட்டை புரிந்து கொள்ள முடியும். 
 
அந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய ரஹானே 268 ரன்களை எடுத்திருந்தார். இந்த 8 இன்னிங்ஸ்களில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரே ஒரு சதத்தை மட்டுமே அடித்திருந்தார். மெல்பர்னில் நடைபெற்ற அந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 112 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து இந்தியாவில் வைத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருந்தார்.  இந்த 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களை அடித்திருந்தார். இந்த தொடரில் அவர் அடித்த ஒரே ஒரு அரைசதம் அதுதான்.
 

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
அடுத்ததாக ஜுன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் 49, 15 என்றே ஸ்கோர் செய்திருந்தார். இந்த தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்கியது. இந்த தொடரில் 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய ரஹானே 105 ரன்களை மட்டுமே எடுத்தார். லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஒரே ஒரு அரைசதம் அடித்திருந்தார். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கு நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களிலும் இரண்டாம் இன்னிங்ஸில் 4 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்தார்.
 
ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இப்போது வரை 25 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருக்கிறார். இந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களையும் 1 சதத்தையும் மட்டுமே அடித்திருக்கிறார். மீதமிருக்கும் 22 இன்னிங்ஸ்களிலும் சொதப்பலே. சதம் அடிப்பதும் அரைசதம் அடிப்பதும் மட்டுமே சாதனை அல்ல. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது தேவையான 10 ரன்களை அடித்துக் கொடுத்தால் கூட சாதனைதான். ஆனால், ரஹானே அப்படி தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கூட பெரிதாக எங்கேயும் ஆடவில்லை. வருடத்திற்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸை மட்டுமே ஆடி வருகிறார்.
 

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
இங்கிலாந்துக்கு எதிரான தொடரே ரஹானேவுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித், ராகுல், கோலி என முக்கிய வீரர்கள் அத்தனை பேரும் நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆடாததால், வேறு வழியின்றி ரஹானேவுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது.
 
அடுத்த போட்டியில் கோலி ப்ளேயிங் லெவனுக்கு திரும்பும்போது அவர் நம்பர் 4 இல் இறங்குவார். அப்படியெனில் ரஹானே அவருடைய நம்பர் 5 க்கு திரும்பியாக வேண்டும். ஆனால், நம்பர் 5 இல் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்திருக்கிறார். இரண்டாவது டெஸ்ட்டையே விட்டுவிட்டாலும், அடுத்தடுத்த தொடர்களில் ரோஹித்தும் ராகுலும் ஓப்பனர்களாக இறக்கும் போது சுப்மன் கில் மாதிரியான இளம் வீரர் எங்கே இறங்குவார் எனும் கேள்வி எழும். அவரை மிடில் ஆர்டரில் இறக்கலாம் என ஏற்கனவே ஒரு திட்டம் இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்திலும் ரஹானே மீதே கை வைக்கப்பட்டும். இது போதாதென சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்க வேறு செய்கிறார்கள். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ரஹானே தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கிறார். ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அது அவரது கிரிக்கெட் கரியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பாகவே அமையும். ரஹானே என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Embed widget