மேலும் அறிய

BCCI: இனிமே இதை செஞ்சா தான் இந்திய அணியில் வாய்ப்பு?..பிசிசிஐ எடுத்த புதிய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, ஒரு பெரும் உணர்வாகவும் இது மாறியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த விளையாட்டு, உலக அளவில் மிகப்பெரும் வணிகமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து, ஆசியக்கோப்பை, டீ-20 உலகக்கோப்பை தொடர் மற்றும் வங்கதேசத்துடனுடான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

வீரர்களுக்கு கட்டுப்பாடு:

அந்த வகையில் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்ததில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்திய அணியில்  இடம்பெறும் வீரர்கள்  உள்ளூர் போட்டிகளில்  விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை,  துலீப் கோப்பை  உள்ளிட்ட  உள்ளூர் போட்டிகளில்  விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணிக்கு தேர்வு பெற கட்டாயம் யோ-யோ, DEXA பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில்  இந்திய வீரர்களின் விளையாட்டை  தேசிய கிரிக்கெட் அகாடெமியின் அதிகாரிகள்  கண்காணிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்களின் தேர்வு:

முன்னதாக, ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கும் முறை ஆரம்ப காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதைதொடர்ந்து, ஐபிஎல் தொடர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

2 கி.மீ. பரிசோதனை:

இந்திய வீரர்களின் உடற்தகுதிக்கு ஏற்கனவே பிசிசிஐ அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இந்திய வீரர்களுக்கான பயிற்சி திட்டத்தில் வேகம் மற்றும் சகிப்புத்தன்மையின் அளவை பரிசோதிக்க 2 கி.மீ நேர சோதனை பின்பற்றப்படுகிறது.  அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளரகளுக்கு, தரநிலை 8 நிமிடங்கள் 30 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 30வினாடிகளில் கடக்க வேண்டும். அதேபோல், எலைட்  தரத்தில் உள்ள வீரர்கள் சுமார் 6 நிமிடங்களில் மற்றும் அமெச்சூர் வீரர்கள் 15 நிமிடங்களில் 2 கி.மீ தொலைவை கடக்க வேண்டும் என கூறப்படுகிறது.

யோ-யோ டெஸ்ட்:

இந்திய அணியில் தேர்வாக யோ யோ டெஸ்ட் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில், தேறவில்லை என்றால் அணியில் இடம்பிடிக்க முடியாது.  யோ-யோ இன்டெர்மிட்டன்ட் ரெக்கவரி டெஸ்ட்  தற்போது கிரிக்கெட் அணித்தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக்கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். 40 விநாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் லெவலில் அந்த வீரர் 8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டியது இருக்கும். அடுத்த லெவலில் 11.5 கிலோமீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். இதுபோல் மொத்தம் 23 லெவல்கள் உள்ளன. ஒவ்வொரு லெவலுக்கும் வீரரின் ஓடும் வேகம் அதிகரிக்கப்படும். இந்த 23 கட்டங்கள் ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் நடைபெறும். ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே அந்த வீரருக்கு 10 விநாடிகள் ஓய்வு வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget