மேலும் அறிய

INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருபவர் ரவிசாஸ்திரி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டீங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பயிற்சிகாலமும் நிறைவடைய உள்ளது.

இதனால், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பு ஏற்குமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

அனில் கும்ப்ளே ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார். ஓராண்டு காலம் மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்த கும்ப்ளேவிற்கு, கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அணியின் பயிற்சியாளராக 2017-ஆம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த சூழலில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை மீண்டும் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி 2017ம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் கோப்பையை பறிகொடுத்தது. தற்போது, அனில் கும்ப்ளே ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டால் அவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய நேரிடும்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த அனில்கும்ப்ளே இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தவர். கும்ப்ளே இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையும் அனில் கும்ப்ளேவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவை அணுகுவதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனேவிடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக தற்போது ஜெயவர்த்தனே பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆனால், ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்து வருவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியையும் சேர்த்து வகிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ.யின் புதிய விதிப்படி ஒருவர் இரு பதவியை வகிப்பது என்பது ஏற்கப்படாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
MS Dhoni:
MS Dhoni: "தோனி இம்பாக்ட் பிளேயரா? விக்கெட் கீப்பரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே சிஇஓ
IPL 2026 Schedule: கொளுத்துங்க பட்டாச.. RCB-யின் கோட்டையில் தொடங்கும் ஐபிஎல் 2026.. CSK முதல் போட்டி யாருடன்?
IPL 2026 Schedule: கொளுத்துங்க பட்டாச.. RCB-யின் கோட்டையில் தொடங்கும் ஐபிஎல் 2026.. CSK முதல் போட்டி யாருடன்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
Embed widget