மேலும் அறிய

INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருபவர் ரவிசாஸ்திரி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டீங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பயிற்சிகாலமும் நிறைவடைய உள்ளது.

இதனால், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பு ஏற்குமாறு அனில் கும்ப்ளேவிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

அனில் கும்ப்ளே ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார். ஓராண்டு காலம் மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்த கும்ப்ளேவிற்கு, கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அணியின் பயிற்சியாளராக 2017-ஆம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த சூழலில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை மீண்டும் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி 2017ம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் கோப்பையை பறிகொடுத்தது. தற்போது, அனில் கும்ப்ளே ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டால் அவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய நேரிடும்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த அனில்கும்ப்ளே இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தவர். கும்ப்ளே இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையும் அனில் கும்ப்ளேவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


INDIAN CRICKET COACH : மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா அனில் கும்ப்ளே?

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அனில் கும்ப்ளேவை அணுகுவதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனேவிடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக தற்போது ஜெயவர்த்தனே பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆனால், ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்து வருவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியையும் சேர்த்து வகிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ.யின் புதிய விதிப்படி ஒருவர் இரு பதவியை வகிப்பது என்பது ஏற்கப்படாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Embed widget