மேலும் அறிய

Tirumala Tirupati: இன்று இவ்வளவு நேரம் மட்டும் திருமலையானை தரிசிக்க அனுமதி..? காரணம் இதுதான்! தெரிவித்த தேவஸ்தானம்

இன்று அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடையானது காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடையானது காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் இன்று அன்ன பிரசாதம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயணம் குறித்து திட்டுமிட்டு கொள்ளுமாறு தேவஸ்தானம் கூறியுள்ளது. 

மேலும், நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி கோயில் நடை காலை முதல் மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் மூடப்படும். அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும் என்றும், அதன்படி பக்தர்கள் பயணத்தை திட்டமிடுமாறு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கிரகணம் என்றால் என்ன..? 

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திப்பே கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்போது அது சந்திர கிரகணம் என்றும் அழைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 4 முறை கிரகணங்கள் தோன்றுகின்றனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, 2022 அன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்தது. இன்று அக்டோபர் 25, 2022 வருவது இரண்டாவது சூரிய கிரகணமாகும். இதுவே இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் கூட. நாளைய சூரிய கிரகணம் வடகிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தெரியும். அதே நேரத்தில் இது இந்தியாவில் பகுதி நேர சூரிய கிரகணமாக தென்படும். 

இன்று பகுதி சூரிய கிரகணம்:

சந்திரனின் நிழல் சூரியனை முழுமையாக மறைக்கும்போது அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்றும் கூறுவர். அதன்படி, இன்று சென்னையை பொறுத்தவரை மாலை 5.15 முதல் 5.45 வரை தோன்ற இருக்கிறது. அதேபோல், திருப்பதியில் சூரிய கிரகணம் மாலை 4.58 முதல் 5.48 வரை நிகழ இருக்கிறது. 

அடுத்த சூரிய கிரகணம் எப்போது?

இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இது பகுதி சூரிய கிரகணமாகப் பார்க்கப்படும்.

ரஷ்யாவின் தெற்குப் பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும். அக்டோபர் 25 அன்று பல இந்திய நகரங்களில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget