மேலும் அறிய

Panguni Uthiram 2024: கடன் தொல்லை நீங்க பங்குனி உத்திரத்தில் முருகனை எப்படி வழிபட வேண்டும்?

பங்குனி உத்திர நன்னாளில் முருகப்பெருமானை வணங்கினால் கடன் தொல்லை உள்பட கஷ்டங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  ஒவ்வொரு தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமி தினத்தை  சிறப்பாக நம் முன்னோர்கள் கொண்டாடினர்.  அந்த வகையில்  தமிழ் மாதத்தின் 12 வது மாதமான பங்குனி மாதத்தையும் நட்சத்திரத்தில் 12வது நட்சத்திரமான உத்திரத்தையும் சேர்த்து, பங்குனி மாத பௌர்ணமணி தினத்தை பங்குனி உத்திர திருவிழாவாக உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். 

பங்குனி உத்திரத்திற்கும் முருகப்பெருமானுக்கும் என்ன தொடர்பு? முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றது இதே பங்குனி உத்திரம் நாளில் ஆகும். பனிரெண்டாவது மாதமான பங்குனியில்  பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரத்தில்  ஆறுமுகத்தைக் கொண்டு பன்னிரு கைகளை உடைய எம்பெருமான் முருகனின்  அருட்கடாட்சத்தை பெறுவதே பங்குனி உத்திரத்தின்  சிறப்பாகும்.  உத்திர நட்சத்திரம் சிவபெருமானுடைய நட்சத்திரம் என்பதால், அதே தினத்தில் சிவனுக்கு ஆராதனை அபிஷேகங்கள் செய்து  சிவன் கோவிலுக்கு சென்று விரதமிருந்து வழிபட்டு  வர  கஷ்டம் எல்லாம் பறந்து ஓடி  எம்பெருமான் சர்வேஸ்வரன் நன்மைகள் எல்லாம் வாரி வழங்குவார்.

2024 பங்குனி உத்திரம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?

 மார்ச் மாதம் 24ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மேல்  தொடங்கி  மார்ச் மாதம் 25ஆம் தேதி 10 மணிக்குள்ளாக  உத்திர நட்சத்திரத்தோடு சுப தினம் கூடிய பௌர்ணமி திதியில்  பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒரு சிலர் காலை 6:00 மணி முதலே விரதம் இருக்கத் தொடங்குவார்கள். ஆனால் பௌர்ணமி திதி என்பது  24 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மேல் ஆரம்பிப்பதால்  எம்பெருமான் முருகனின்  அருட் கடாட்சத்தை பெறலாம்.  பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுக்கலாம்.

சூரிய பகவான்  மீன ராசியில் வீற்றிருக்க சந்திரன் கன்னி ராசியில் வீற்றிருக்கிறார்.  குருவினுடைய வீட்டில் சூரியனும்  புதனின் வீட்டில் சந்திரனும் வீற்றிருக்க  சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் நேரத்தில்  சிவாலயங்களுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டால்  சத்ரு பயம் நீங்கும்.  செல்வம் பெருகும்.  பரம்பொருளான சிவபெருமானுடன்  பக்தர்கள்  இணைவது இந்த நாளில் மற்றொரு சிறப்பு.

பொதுவாகவே எவ்வளவு பெரிய கஷ்டங்கள் ஒருவருக்கு வாழ்வில் இருந்தாலும்  அவர் முருகனை நினைத்து விரதம் இருந்தால்  அந்த விரதத்திற்கு மிகப்பெரும் பலன் உண்டு.  பணக்கஷ்டம் இருப்பவர் நிச்சயமாக முருகனை நோக்கி தவம் இருந்தால்  அவர்களுக்கு கடன் தொல்லை நீங்கி  பணவரவு உண்டாகும்.  முருகனுக்கு மட்டுமல்ல பங்குனி உத்திரம் என்பது பொதுவாக அனைத்து  தெய்வங்களையும் வழிபடக்கூடிய ஒரு நன்னாளாக திகழ்கிறது.

கடன்களை அடைக்கும் பங்குனி  உத்திரம் !!

கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் வீடான கன்னி ராசியில் உத்திர நட்சத்திரம் உள்ளதால்  இந்த நட்சத்திரம்  படங்களை அடைப்பதற்கான ஒரு நல்ல நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது.  ஆறாம் பாவம் கடனைக் குறிக்கும்  கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் பாவமான கடன்களை குறிக்கக்கூடிய கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி மாதத்தில் இந்த சிறப்பு நன்னாள் அமைந்திருப்பதால் பங்குனி உத்தர நட்சத்திரம்  நிச்சயமாக கடன்களை அடைக்க கூடிய ஒரு சிறப்பான நட்சத்திரமாக தான் இருக்கும். 

இந்த நாளில் நீங்கள் முருகப்பெருமானுடைய பெயருக்கு சிறப்பு அர்ச்சனைகளை கோயில்களில் செய்து வந்தாலும் வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு விளக்கேற்றி  பக்தியுடன் வணங்கி வந்தாலோ  உங்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.  குறிப்பாக  ஆயிரங்களைப் பார்த்தவர்கள் எல்லாம் கோடிகளைப் பார்க்கும் அளவிற்கு  இந்த நன்னாள் நம்மை உயர்த்தும்.

தலைப்பு செய்திகள்

ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
​காஞ்சியில் அற்புதம்! லட்சுமி, சரஸ்வதியுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்!
​காஞ்சியில் அற்புதம்! லட்சுமி, சரஸ்வதியுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
சுக்கிர தோஷம் போக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர்: மங்காத செல்வமும் மங்கல வாழ்வும் தரும் நவக்கிரகத் திருத்தலம்!
சுக்கிர தோஷம் போக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர்: மங்காத செல்வமும் மங்கல வாழ்வும் தரும் நவக்கிரகத் திருத்தலம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Embed widget