மேலும் அறிய

வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு, சனி கவசம் பாடிய, இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக  நடைபெற்றது. ஶ்ரீ தேவி, பூதேவி சமேத சீனுவாசபெருமாள் தேரில் எழுந்தருளினர். அங்கு மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து தேரானது இறுதியாக ஆலயத்தில் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

இதேபோன்று  தினந்தோறும் இங்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற பெருமாள் வீதியுலாவில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் அண்ணவாகனத்தில் எழுந்தருளினார். வேதியர்கள் மந்திரம் முழங்க, சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்று வானமுட்டி பெருமாள் வீதியுலா சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடாந்து கோயிலை வந்தடைந்த பின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


மயிலாடுதுறை காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயிலில் 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவத்தில், கருட வாகனத்தில் வீதி உலா வந்த கிருஷ்ண பகவானுக்கு ஏராளமான பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவில் பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

தொடர்ந்து, காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீதியுலாவில் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு சுவாமிக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.


மயிலாடுதுறையில் நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அருளாசி கூறினார்.

தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த புவனேஸ்வரி சுகுமார் நடத்தி வரும் நிருத்யாலயா நாட்டியப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் சலங்கை பூஜை விழா எனப்படும், பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, சலங்கை பூஜை செய்து, மாணவிகளுக்கு சலங்கையும், சான்றிதழையும் வழங்கினார். 


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

தொடர்ந்து, அவர் பரதக் கலையின் சிறப்புகள் குறித்து ஆசியுரை ஆற்றினார். அப்போது, அவர் நாட்டியக் கலைக்கு முதற்கடவுள் நடராஜ பெருமான். அதனால் தான் ஆடல் கலையே தேவன் தந்தது என்று சொல்வார்கள். 108 விதமான நடனங்கள் சுவாமியே செய்து காட்டியுள்ளார். எனவே, இந்த நடனக் கலையானது மிக உன்னதமானது. உலகெங்கும் பரவிவரும் இந்த கலையை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே விநாயகர்... இரண்டு சதுர்த்திகள்...!விநாயகர் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்திக்கும் என்ன வித்தியாசம்?
ஒரே விநாயகர்... இரண்டு சதுர்த்திகள்...!விநாயகர் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்திக்கும் என்ன வித்தியாசம்?
Vinayagar Chaturthi 2026: விநாயகருக்கு அருகம்புல் மாலை எதற்காக? சுவாரஸ்யமான பின்னணி என்ன தெரியுங்களா?
விநாயகருக்கு அருகம்புல் மாலை எதற்காக? சுவாரஸ்யமான பின்னணி என்ன தெரியுங்களா?
Vinayagar Chaturthi 2026: தமிழ்நாட்டின் உயரமான விநாயகர் சிலை கொண்ட கோயில்கள்.. எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?
Vinayagar Chaturthi 2026: தமிழ்நாட்டின் உயரமான விநாயகர் சிலை கொண்ட கோயில்கள்.. எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?
Vinayagar Chaturthi 2026: சக்கராயுதத்தையே பெற்றுத் தந்த விநாயகர்! காஞ்சியில் இருக்கும் விகட சக்கர விநாயகரின் சுவாரஸ்ய வரலாறு!
Vinayagar Chaturthi 2026: சக்கராயுதத்தையே பெற்றுத் தந்த விநாயகர்! காஞ்சியில் இருக்கும் விகட சக்கர விநாயகரின் சுவாரஸ்ய வரலாறு!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
Embed widget