மேலும் அறிய

வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு, சனி கவசம் பாடிய, இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக  நடைபெற்றது. ஶ்ரீ தேவி, பூதேவி சமேத சீனுவாசபெருமாள் தேரில் எழுந்தருளினர். அங்கு மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து தேரானது இறுதியாக ஆலயத்தில் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

இதேபோன்று  தினந்தோறும் இங்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற பெருமாள் வீதியுலாவில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் அண்ணவாகனத்தில் எழுந்தருளினார். வேதியர்கள் மந்திரம் முழங்க, சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்று வானமுட்டி பெருமாள் வீதியுலா சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடாந்து கோயிலை வந்தடைந்த பின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


மயிலாடுதுறை காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயிலில் 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவத்தில், கருட வாகனத்தில் வீதி உலா வந்த கிருஷ்ண பகவானுக்கு ஏராளமான பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவில் பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

தொடர்ந்து, காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீதியுலாவில் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு சுவாமிக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.


மயிலாடுதுறையில் நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அருளாசி கூறினார்.

தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த புவனேஸ்வரி சுகுமார் நடத்தி வரும் நிருத்யாலயா நாட்டியப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் சலங்கை பூஜை விழா எனப்படும், பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, சலங்கை பூஜை செய்து, மாணவிகளுக்கு சலங்கையும், சான்றிதழையும் வழங்கினார். 


வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

தொடர்ந்து, அவர் பரதக் கலையின் சிறப்புகள் குறித்து ஆசியுரை ஆற்றினார். அப்போது, அவர் நாட்டியக் கலைக்கு முதற்கடவுள் நடராஜ பெருமான். அதனால் தான் ஆடல் கலையே தேவன் தந்தது என்று சொல்வார்கள். 108 விதமான நடனங்கள் சுவாமியே செய்து காட்டியுள்ளார். எனவே, இந்த நடனக் கலையானது மிக உன்னதமானது. உலகெங்கும் பரவிவரும் இந்த கலையை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த உண்டியல் காணிக்கை! முருகனுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த உண்டியல் காணிக்கை! முருகனுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்!
Goddess Mahalakshmi: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. இதெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!
Goddess Mahalakshmi: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. இதெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
உலகமே உற்றுநோக்கும் ஆன்மீகச் சங்கமம்: பிரதமர் மோடி தலைமையில் ஆரோவில்லில் உலக ஆன்மீக மகோத்சவம்!
உலகமே உற்றுநோக்கும் ஆன்மீகச் சங்கமம்: பிரதமர் மோடி தலைமையில் ஆரோவில்லில் உலக ஆன்மீக மகோத்சவம்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
Embed widget