மேலும் அறிய

ரஷ்ய பக்தர்களின் நெகிழ்ச்சி பிராத்தனை: போர் நீங்க, உலக அமைதி வேண்டி வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு..!

போர் பதற்றம் நீங்கித் தங்கள் நாட்டில் நிம்மதி நிலவ வேண்டிச் வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலத்தில் ரஷ்யா நாட்டினர் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை: உலகின் பல்வேறு நாடுகளில் போர் மற்றும் பதற்றமான சூழல்கள் நிலவி வரும் நிலையில், ரஷ்யா நாட்டினைச் சேர்ந்த பக்தர்கள் குழு ஒன்று, தங்களின் தாய் நாட்டில் அமைதி நிலவவும், உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும் வேண்டி, இந்தியாவின் புகழ்பெற்ற நவக்கிரகத் தலங்களுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் இன்றிரவு ரஷ்ய நாட்டு பக்தர்கள் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

நவக்கிரக ஸ்தலங்களில் ரஷ்யர்களின் பக்திப் பயணம்

இந்தியாவில் உள்ள பழமையான கோயில்கள் மற்றும் அதன் ஆன்மீகச் சிறப்புகளை உணர்ந்த ரஷ்யா நாட்டினர் பலர், சமீப காலமாகக் குழுக்களாக இந்தியாவுக்கு வந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள நவக்கிரகத் தலங்கள் மற்றும் அதன் தனிச்சிறப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்தக் கோயில்களில் சிறப்புப் பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் செய்வது இவர்கள் வழக்கம்.

தற்போது மயிலாடுதுறைக்கு வந்துள்ள ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் குழு, தங்கள் நாட்டின் மக்கள் மன நிம்மதியுடனும், போர் பதற்றம் இல்லாத சூழலிலும் வாழ வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். உலக நன்மை, அமைதி மற்றும் தங்கள் நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி, இந்தக் குழுவினர் பல்வேறு பூஜைகளைத் தமிழகக் கோயில்களில் நடத்தி வருகின்றனர்.

வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு யாகம்

நவக்கிரகத் தலங்களில் செவ்வாய் (அங்காரகன்) ஸ்தலமாக விளங்கும் புண்ணியத் தலமே வைத்தீஸ்வரன் கோயில். இந்தக் கோயில், வைத்தியநாதசுவாமி மற்றும் தையல்நாயகி அம்பாள் ஆகியோரை மூலவர்களாகக் கொண்டு திகழ்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் குழுவினர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கிருந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வேத விற்பன்னர்களின் துணையோடு, தங்கள் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிச் சிறப்பு யாகங்கள் நடத்தினர். வைத்தியநாதசுவாமி மற்றும் தையல்நாயகி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் நடத்தப்பட்டன.

யாகசாலையில் அமர்ந்து, வேதியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ரஷ்ய நாட்டுப் பக்தர்களும் பக்திப் பரவசத்துடன் பூஜைகளில் கலந்துகொண்டனர். தங்கள் நாட்டில் போர் பதற்றம் நீங்கி, நிம்மதியும் அமைதியும் திரும்ப வேண்டும் என்று மனமுருகிச் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். வழிபாடுகள் முடிந்த பின்னர், அங்கிருந்த பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் ஆர்வம்

வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது, ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் தங்கள் இந்திய மற்றும் தமிழகப் பயணம் குறித்துத் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில்;

"இந்தியாவின் ஆன்மீகத் தத்துவம் மிகவும் ஆழமானது. குறிப்பாக, தமிழ்நாட்டின் நவக்கிரக வழிபாட்டு முறைகள் மிகவும் தனித்துவமானவை. நாங்கள் நவக்கிரக ஸ்தலங்கள் அனைத்திலும் பூஜைகள் செய்து வழிபட வந்துள்ளோம். இந்த வழிபாடுகளின் மூலம் எங்களுக்கும், எங்கள் நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் அமைதியும், நன்மையும் கிடைக்கும் என்று நம்புகிறோம்."

மேலும், தாங்கள் தமிழகத்திற்குக் கல்வி மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்காக வந்து, இங்குள்ள தமிழ் மொழியையும், தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் ஆர்வத்துடன் கற்று வருவதாகவும் தெரிவித்தனர். "தமிழின் தொன்மையும், கலாச்சாரமும் எங்களை மிகவும் ஈர்த்துள்ளது. இந்த வழிபாட்டு முறைகளை நாங்கள் பின்பற்றவும், தமிழ் மொழியை நேசிக்கவும் தொடங்கிவிட்டோம். நாங்கள் எங்கள் நாட்டிற்குத் திரும்பிய பிறகும், உலகம் முழுவதும் எங்கள் அனுபவத்தைப் பரப்புவோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நவகிரக ஸ்தலங்களில் வழிபாடு 

தொடர்ந்து, இந்தக் குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மற்ற நவக்கிரகத் தலங்களான திருவெண்காடு (புதன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (சுக்கிரன்) உள்ளிட்ட ஸ்தலங்களில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட உள்ளதாகத் தகவல் வெளியானது. ரஷ்யா நாட்டுப் பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைதிக்காக நடத்திய இந்தச் சிறப்பு வழிபாடு, இந்திய-ரஷ்ய கலாச்சார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவும், உலக அமைதிக்கான பொதுவான விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
"கல்லில் ஆடிய நர்த்தனம்: சோழர் கால சிற்பிகளின் வியக்கவைக்கும் உளி வீச்சு!" எங்கு தெரியுங்களா?
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
RJ Balaji:”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
Embed widget