மேலும் அறிய

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

கார்த்திகை மாதம் பலரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வரும் சூழலில், மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில்தான் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். மணிகண்டன் ஐயப்பனாக மாறியது எப்படி? அவருக்கு சபரிமலையில் கோயில் உருவானது எப்படி? என்பதை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மணிகண்டன் அவதாரம்:

முனிவர் ஒருவரின் சாபம் காரணமாக மஹிஷி என்ற பெண் அரக்கியாக மாறினார். அரக்கியாக மாறிய மஹிஷி படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி தவம் புரிகிறார். மஹிஷியின் தவத்தை மெச்சிய பிரம்மன், மஹிஷிக்கு காட்சி தந்தார். அப்போது, மஹிஷி தனக்கு சிவன் மற்றும் பெருமாளுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த வரத்தை பிரம்மன் அளிக்கிறார்.

பிரம்மனிடம் பெற்ற வரம் காரணமாக மஹிஷி தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்துகிறார். மஹிஷியை வதம் செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுக்க, அப்போது கழுத்தில் மணியுடன் அவதரிக்கிறார் மணிகண்டன்.

பந்தள ராஜமன்னன்:

பல காலமாக குழந்தை இல்லாமல் பந்தள மன்னன் ராஜசேகரன் வேதனைக்கு ஆளாகி வந்தார். காட்டுக்கு தனது படையுடன் வேட்டையாடச் சென்ற மன்னன் ராஜசேகரனுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தை மணிகண்டனைச் சுற்றி புலிகள் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

புலிகள் பாதுகாப்பில் பம்பா நதிக்கரையில் தவழ்ந்த மணிகண்டன், பந்தள மன்னனிடம் வளர வேண்டும் என்பதற்காக புலிகள் விலகிச் சென்றது. அப்போது, பந்தள மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை எடுத்துச் சென்று தனது மகனாக வளர்க்கிறார்.

ஐயப்பன்:

அப்போது, மன்னனின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. அப்போது, தன்னுடைய மகனுக்கு மணிகண்டனால் அரசாளும் உரிமை பறிபோகிவிடும் என்ற அச்சம் அரசிக்கு ஏற்படுகிறது. அப்போது, அரசி தனக்கு தலைவலியாக இருப்பதாகவும், தனக்கு புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனுக்கு உத்தரவிடுகிறார்.

காட்டிற்குச் செல்லும் மணிகண்டன் அங்கு அரக்கி மஹிஷியிடம் போர் புரிந்து, அந்த அரக்கியை அழித்து அரக்கியின் உள்ளே இருந்த பெண்ணுக்கு சாப விமோசனம் தருகிறார். அரசி கேட்டது போல புலிப்பாலை புலி வாகனனாகவே கொண்டு வந்து மணிகண்டன் ஐயப்பனாக மாறியதை பார்த்து பந்தள ராஜவம்சமே கைகூப்பி வணங்கினர்.

இரு முடி:

பின்னர், துறவறம் ஏற்று ஐயப்பனாக காட்டிற்கு தவம் செய்ய செல்கிறார். ஆனாலும், அவரை பிரிய பந்தள மன்னன் ராஜசேகரனுக்கு மனமில்லை. இதனால், வருடத்திற்கு ஒரு முறை தான் தவத்தில் இருந்து விடுபடுவதாகவும், அந்த நாள் பந்தள ராஜவம்சம் தரும் மரியாதையை ஏற்பதாகவும் உத்தரவாதம் தருகிறார்.

இதன்காரணமாக வருடத்திற்கு ஒரு முறை மகனை காண தலையில் இரு முடி சுமந்து மன்னன் ராஜசேகரன் சென்றார். ஒரு முடியில் தனக்கு தேவையானவற்றையும், மறுமுடியில் மணிகண்டனுக்கு தேவையானவற்றையும் எடுத்துச் சென்றார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. பின்னர், காலப்போக்கில் மணிகண்டன் தவம் செய்ய அமர்ந்த இடத்தில் சபரிபீடமும், 18 படிகளும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு இரு முடி கட்டி பக்தர்கள் மலையேறுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget