மேலும் அறிய

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

கார்த்திகை மாதம் பலரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வரும் சூழலில், மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில்தான் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். மணிகண்டன் ஐயப்பனாக மாறியது எப்படி? அவருக்கு சபரிமலையில் கோயில் உருவானது எப்படி? என்பதை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மணிகண்டன் அவதாரம்:

முனிவர் ஒருவரின் சாபம் காரணமாக மஹிஷி என்ற பெண் அரக்கியாக மாறினார். அரக்கியாக மாறிய மஹிஷி படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி தவம் புரிகிறார். மஹிஷியின் தவத்தை மெச்சிய பிரம்மன், மஹிஷிக்கு காட்சி தந்தார். அப்போது, மஹிஷி தனக்கு சிவன் மற்றும் பெருமாளுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த வரத்தை பிரம்மன் அளிக்கிறார்.

பிரம்மனிடம் பெற்ற வரம் காரணமாக மஹிஷி தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்துகிறார். மஹிஷியை வதம் செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுக்க, அப்போது கழுத்தில் மணியுடன் அவதரிக்கிறார் மணிகண்டன்.

பந்தள ராஜமன்னன்:

பல காலமாக குழந்தை இல்லாமல் பந்தள மன்னன் ராஜசேகரன் வேதனைக்கு ஆளாகி வந்தார். காட்டுக்கு தனது படையுடன் வேட்டையாடச் சென்ற மன்னன் ராஜசேகரனுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தை மணிகண்டனைச் சுற்றி புலிகள் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

புலிகள் பாதுகாப்பில் பம்பா நதிக்கரையில் தவழ்ந்த மணிகண்டன், பந்தள மன்னனிடம் வளர வேண்டும் என்பதற்காக புலிகள் விலகிச் சென்றது. அப்போது, பந்தள மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை எடுத்துச் சென்று தனது மகனாக வளர்க்கிறார்.

ஐயப்பன்:

அப்போது, மன்னனின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. அப்போது, தன்னுடைய மகனுக்கு மணிகண்டனால் அரசாளும் உரிமை பறிபோகிவிடும் என்ற அச்சம் அரசிக்கு ஏற்படுகிறது. அப்போது, அரசி தனக்கு தலைவலியாக இருப்பதாகவும், தனக்கு புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனுக்கு உத்தரவிடுகிறார்.

காட்டிற்குச் செல்லும் மணிகண்டன் அங்கு அரக்கி மஹிஷியிடம் போர் புரிந்து, அந்த அரக்கியை அழித்து அரக்கியின் உள்ளே இருந்த பெண்ணுக்கு சாப விமோசனம் தருகிறார். அரசி கேட்டது போல புலிப்பாலை புலி வாகனனாகவே கொண்டு வந்து மணிகண்டன் ஐயப்பனாக மாறியதை பார்த்து பந்தள ராஜவம்சமே கைகூப்பி வணங்கினர்.

இரு முடி:

பின்னர், துறவறம் ஏற்று ஐயப்பனாக காட்டிற்கு தவம் செய்ய செல்கிறார். ஆனாலும், அவரை பிரிய பந்தள மன்னன் ராஜசேகரனுக்கு மனமில்லை. இதனால், வருடத்திற்கு ஒரு முறை தான் தவத்தில் இருந்து விடுபடுவதாகவும், அந்த நாள் பந்தள ராஜவம்சம் தரும் மரியாதையை ஏற்பதாகவும் உத்தரவாதம் தருகிறார்.

இதன்காரணமாக வருடத்திற்கு ஒரு முறை மகனை காண தலையில் இரு முடி சுமந்து மன்னன் ராஜசேகரன் சென்றார். ஒரு முடியில் தனக்கு தேவையானவற்றையும், மறுமுடியில் மணிகண்டனுக்கு தேவையானவற்றையும் எடுத்துச் சென்றார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. பின்னர், காலப்போக்கில் மணிகண்டன் தவம் செய்ய அமர்ந்த இடத்தில் சபரிபீடமும், 18 படிகளும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு இரு முடி கட்டி பக்தர்கள் மலையேறுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம் ஆகும்.

தலைப்பு செய்திகள்

மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!
கோவிந்தா நாமத்தின் ரகசியம்: ஒலிக்கும் முழக்கத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கதை!
கோவிந்தா நாமத்தின் ரகசியம்: ஒலிக்கும் முழக்கத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கதை!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget