மேலும் அறிய

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

கார்த்திகை மாதம் பலரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வரும் சூழலில், மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில்தான் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். மணிகண்டன் ஐயப்பனாக மாறியது எப்படி? அவருக்கு சபரிமலையில் கோயில் உருவானது எப்படி? என்பதை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மணிகண்டன் அவதாரம்:

முனிவர் ஒருவரின் சாபம் காரணமாக மஹிஷி என்ற பெண் அரக்கியாக மாறினார். அரக்கியாக மாறிய மஹிஷி படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி தவம் புரிகிறார். மஹிஷியின் தவத்தை மெச்சிய பிரம்மன், மஹிஷிக்கு காட்சி தந்தார். அப்போது, மஹிஷி தனக்கு சிவன் மற்றும் பெருமாளுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த வரத்தை பிரம்மன் அளிக்கிறார்.

பிரம்மனிடம் பெற்ற வரம் காரணமாக மஹிஷி தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்துகிறார். மஹிஷியை வதம் செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுக்க, அப்போது கழுத்தில் மணியுடன் அவதரிக்கிறார் மணிகண்டன்.

பந்தள ராஜமன்னன்:

பல காலமாக குழந்தை இல்லாமல் பந்தள மன்னன் ராஜசேகரன் வேதனைக்கு ஆளாகி வந்தார். காட்டுக்கு தனது படையுடன் வேட்டையாடச் சென்ற மன்னன் ராஜசேகரனுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தை மணிகண்டனைச் சுற்றி புலிகள் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

புலிகள் பாதுகாப்பில் பம்பா நதிக்கரையில் தவழ்ந்த மணிகண்டன், பந்தள மன்னனிடம் வளர வேண்டும் என்பதற்காக புலிகள் விலகிச் சென்றது. அப்போது, பந்தள மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை எடுத்துச் சென்று தனது மகனாக வளர்க்கிறார்.

ஐயப்பன்:

அப்போது, மன்னனின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. அப்போது, தன்னுடைய மகனுக்கு மணிகண்டனால் அரசாளும் உரிமை பறிபோகிவிடும் என்ற அச்சம் அரசிக்கு ஏற்படுகிறது. அப்போது, அரசி தனக்கு தலைவலியாக இருப்பதாகவும், தனக்கு புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனுக்கு உத்தரவிடுகிறார்.

காட்டிற்குச் செல்லும் மணிகண்டன் அங்கு அரக்கி மஹிஷியிடம் போர் புரிந்து, அந்த அரக்கியை அழித்து அரக்கியின் உள்ளே இருந்த பெண்ணுக்கு சாப விமோசனம் தருகிறார். அரசி கேட்டது போல புலிப்பாலை புலி வாகனனாகவே கொண்டு வந்து மணிகண்டன் ஐயப்பனாக மாறியதை பார்த்து பந்தள ராஜவம்சமே கைகூப்பி வணங்கினர்.

இரு முடி:

பின்னர், துறவறம் ஏற்று ஐயப்பனாக காட்டிற்கு தவம் செய்ய செல்கிறார். ஆனாலும், அவரை பிரிய பந்தள மன்னன் ராஜசேகரனுக்கு மனமில்லை. இதனால், வருடத்திற்கு ஒரு முறை தான் தவத்தில் இருந்து விடுபடுவதாகவும், அந்த நாள் பந்தள ராஜவம்சம் தரும் மரியாதையை ஏற்பதாகவும் உத்தரவாதம் தருகிறார்.

இதன்காரணமாக வருடத்திற்கு ஒரு முறை மகனை காண தலையில் இரு முடி சுமந்து மன்னன் ராஜசேகரன் சென்றார். ஒரு முடியில் தனக்கு தேவையானவற்றையும், மறுமுடியில் மணிகண்டனுக்கு தேவையானவற்றையும் எடுத்துச் சென்றார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. பின்னர், காலப்போக்கில் மணிகண்டன் தவம் செய்ய அமர்ந்த இடத்தில் சபரிபீடமும், 18 படிகளும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு இரு முடி கட்டி பக்தர்கள் மலையேறுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
4448 நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா... 10 நாட்கள் கோலாகல கொண்டாட்டம்...!
4448 நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா... 10 நாட்கள் கோலாகல கொண்டாட்டம்...!
Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?
Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Embed widget