மேலும் அறிய

Vastu Tips: ஆமை வீட்டில் புகுந்தால் அதிர்ஷ்டமா? - சிலைகளை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆன்மிகப்படி, ஆமை உங்கள் வீட்டிற்குள் புகுந்தால் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது அர்த்தமாக பார்க்கப்படுகிறது. வடமாநிலங்களில் பலரின் வீட்டின் வாயிலிலும் ஆமை சிலை இருப்பதைக் காணலாம்.

பொதுவாக நம்மூரில் பல்வேறு விதமான பலமொழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதாகும். இதன்மூலம் ஆமையை நாம் துரதிர்ஷ்டசாலி என ஒதுக்குகிறோம். பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஆமை ஆன்மிகம் என வந்து விட்டால் ஒதுக்குகிறோம். ஆனால் திருமாலில் அருள் பெற்ற ஆமை அவரின் பத்து அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரமாகும். 

ஆன்மிகப்படி, ஆமை உங்கள் வீட்டிற்குள் புகுந்தால் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது அர்த்தமாக பார்க்கப்படுகிறது. வடமாநிலங்களில் பலரின் வீட்டின் வாயிலிலும் ஆமை சிலை இருப்பதைக் காணலாம். சீனாவில் ஆமை அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே அறியப்படுகிறது. நீண்ட ஆயுளுக்கு பெயர் போன ஆமை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் சொல்லப்படுகிறது. நீங்கள் யதார்த்தமாக எங்கேயும் ஆமையைப் பார்த்தால் விரைவில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது ஐதீகமாகும். 

வீடுகளில் ஆமை இருந்தால் என்ன பலன்?

உங்கள் வீட்டில் ஆமை சிலை இருந்தால் அது குடும்பத்தினருக்கு நீண்ட ஆரோக்கியம், நீள் ஆயுள், அதிர்ஷ்டம் ஆகியவை கிடைத்து வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. வடக்கு திசையில் ஆமை சிலையை வைப்பது சிறந்தது என சொல்லப்படுகிறது. இதன்மூலம் வீட்டில் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல் மரத்தால் செய்யப்பட்ட ஆமை சிலையை வீட்டின் கிழக்கு பக்கத்தில் வைத்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

இத்தகைய ஆமையை நாம் வீட்டில் வைப்பதற்கு சில வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் ஆமையை வைத்தால் பணப்பற்றாக்குறை இருக்காது. சிறிது சிறிதாக செல்வம் சேரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டால் ஒரு ஜோடி ஆமை சிலை வாங்கி வைத்து வழிபடலாம் என சாஸ்திரம் கூறுகிறது. 

ஆமை கோயில்கள் பற்றி தெரியுமா?

இத்தகைய ஆமைகள் கடவுள் ரூபமாகவும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஸ்ரீகூர்மம் கோயில் பெருமாள் ஆமை வடிவில் தான் காட்சிக் கொடுக்கிறார். சித்தூரில் உள்ள ஸ்ரீ கூர்ம வரதராஜ சுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் ஆமை வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் தெப்ப குளத்தில் ஆமைகள் காணப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆமை மண்டபம் உள்ளது. தென்னிந்தியாவில் ஆமைகளுக்கு கோயில்களில் தனியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனியும் ஆமையை அதிர்ஷ்டம் இல்லாத உயிரினமாக பார்க்காதீர்கள். 

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்
கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
அமைதி காத்தது போதும்.! அதிரடியாக களத்தில் இறங்கும் விஜய்- தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அமைதி காத்தது போதும்.! அதிரடியாக களத்தில் இறங்கும் விஜய்- தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்
Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Embed widget