மேலும் அறிய
ரோஹித், கோலியின் சகாப்தம் முடிகிறதா? பிசிசியின் அறிவிப்பால் கடுப்பான ரசிகர்கள்!
டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடம்பெறுவதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது, ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் ஷர்மா - விராட் கோலி
1/6

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி 2024ல் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.
2/6

இந்திய அணியின் தோல்வியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான t20 தொடர் நடைபெற உள்ளது.
3/6

இந்தத் தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
4/6

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகள் நடத்துகின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.
5/6

எனினும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடம்பெறுவதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது, ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
6/6

“நடப்பு உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எனினும் மூத்த வீரர்களை பிசிசிஐ ஒதுக்கி வைக்கிறதா ?”என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Published at : 24 Nov 2023 03:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement