மேலும் அறிய
Michaung Cyclone : நாட்கள் கழிந்தும் வெளியேறாத வெள்ள நீர்..அவதிப்படும் சென்னை மக்கள்!
Michaung Cyclone : மிக்ஜாம் புயல் கடந்து இரண்டு நாட்கள் கழிந்துவிட்ட நிலையிலும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் (Photo Credits : PTI)
1/6

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக டிசம்பர் 3 ஆம் தேதி மாறியது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. (Photo Credits : PTI)
2/6

சென்னையில் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் நேற்று கரையை கடந்தது. (Photo Credits : PTI)
3/6

இந்த புயலால் பெய்த கனமழையால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். (Photo Credits : PTI)
4/6

புயல் கடந்து இரண்டு நாட்கள் கழிந்த நிலையிலும் சில பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கியே நிற்கிறது. (Photo Credits : PTI)
5/6

இதனால் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. (Photo Credits : PTI)
6/6

பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். (Photo Credits : PTI)
Published at : 06 Dec 2023 05:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion