மேலும் அறிய
Maatu Pongal 2024 : சொந்த மாடுகளுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்த சேலம் மக்கள்!
Maatu Pongal 2024 : மாட்டுப்பொங்கலான இன்று, ஊரில் உள்ள அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அழகு பார்க்கப்படும்.

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
1/6

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/6

தை முதல் நாளான நேற்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படையலிட்டு வணங்கினர்.
3/6

அதனை தொடர்ந்து 2 ஆம் நாளான இன்று உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
4/6

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து தங்களின் செல்ல பிள்ளையாகவும், உயிர்த் தோழானாகவும் இருந்து உழைத்த கால்நடைகளை குளிப்பாட்டினர்.
5/6

அவற்றை போற்றி நன்றி கூறும் வகையில், மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ண பொடிகள் பூசி அழகு சேர்த்தனர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர்.
6/6

ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளுக்கு பின் வரும் மாட்டுப்பொங்கலன்று, ஊரே களைகட்டும் விதமாக கொண்டாட்டம் பலமாக இருக்கும்.
Published at : 16 Jan 2024 11:15 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion