மேலும் அறிய

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்: இலங்கை விவகாரம் தொடர்பான வரைவு தீர்மானம்: இந்தியாவின் நிலைபாடு என்ன?

47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக வரைவு தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக வரைவு தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதாரவாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

 

எதிர்பார்த்தபடியே, இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவுபெற்ற உள்நாட்டு போரின்போதும் அதற்கு பிறகும் நிகழ்ந்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மையை வெளி கொண்டு வரவும் அதற்கு நீதி பெற்று தரும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்களே இந்த வரைவிலும் இடம்பெற்றுள்ளன. 

கடந்த 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கீழ், எதிர்காலத்தில் போர் குற்ற வழக்குகளை விசாரிக்க மத்திய சர்வதேச தரவுத்தளத்தை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. போர் குற்றம் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணை அலுவலர்களை பணியமர்த்த 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதற்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள வரைவு தீர்மானம் திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதில், போர் குற்றம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், அதை ஒருங்கிணைத்தல், ஆய்வு செய்தல், பாதுகாக்கும் அதிகாரத்தை ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு வழங்கி வலு சேர்த்துள்ளது. 

எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கடுமையான மீறல்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான செயல்முறை உத்திகளை வகுக்கவும், போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக ஆதரவாக வாதிடவும், உறுப்பு நாடுகளில் தகுதிவாய்ந்த அதிகார வரம்பின் கீழ் நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படவும் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகளின் தாக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வரைவுத் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்தை கேட்டு கொண்டுள்ளது.

2025ல் நடைபெறும் கவுன்சிலின் 57வது அமர்வில் விரிவான அறிக்கையுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாய்வழி முன்னேற்றங்களை ஐநா மனித உரிமைகள் தலைவர் வெளியிட வேண்டும் என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அரசுக்கு இந்த தீர்மானம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இம்மாதிரியான சூழலில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை என இலங்கை அரசு தெரிவித்து வருகிறது. ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்படுவது இதுவே முதல்முறை. 

கடந்த 2021ஆம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Embed widget