மேலும் அறிய

அமைதிக்கான நோபல் பரிசு... எதற்கு வழங்கப்படுகிறது... முக்கியத்துவம் என்ன?

அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.

கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார்.

அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.

இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசை வழங்குவதற்காகவே தனது சொத்தின் பெரும் பங்கினை ஆல்பிரட் நோபல் விட்டு சென்றார். 

1968 ஆம் ஆண்டில், ஸ்வீடனின் மத்திய வங்கியால் பொருளாதாரத்திற்கான பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் அது நோபல் பரிசாகக் கருதப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு நிறுவனங்கள் பரிசுகளை வழங்குகின்றன. ஆறு பேரில் ஐந்து பேருக்கு ஸ்வீடனிலும், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் வழங்கப்படுகிறது.

கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், முந்தைய வெற்றியாளர்கள் என பலர் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். பரிசு வென்றவர்கள் லாரியட்ஸ் (laureates) என்று அழைக்கப்படுகிறார்கள். பண்டைய கிரேக்கத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் லாரல் மாலையை இது குறிக்கிறது.

ஒரே பிரிவில் மூன்று பேருக்கு வரை நோபல் பரிசுகளை வழங்கலாம். சில ஆண்டுகளில் பரிசு வழங்கப்படாமலும் இருந்துள்ளது. குறிப்பாக, இரண்டு உலகபோர் நடைபெற்ற சமயத்தில் பரிசுகள் வழங்கப்படவில்லை. நோபல் அறக்கட்டளை விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட பிரிவில் யாரும் பரிசுக்கு தகுதியற்றவர்கள் என கருதப்பட்டால், அது வழங்கப்படாமல் இருக்கலாம். அதன் பரிசுத் தொகை அடுத்த ஆண்டில் கொடுக்கப்படும்.

எதற்காக வழங்கப்படுகிறது?

நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், ராணுவத்தை குறைத்தல், அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

2022ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர்.

தலைப்பு செய்திகள்

Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
US Iran Deal: அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
Embed widget