மேலும் அறிய

Air Plane Accident: தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து புல்வெளியில் பாய்ந்த விமானம்.. மக்களுக்கு என்ன நடந்தது?

தென்கொரியாவின் இச்யொன் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் விமானம் பிலிப்பைன்ஸின் மெச்சன் நகருக்கு பயணித்தது.

தென்கொரியாவின் இச்யொன் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் விமானம் பிலிப்பைன்ஸின் மெச்சன் நகருக்கு பயணித்தது.

விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், 3-வது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளி மீது பாய்ந்தது. 

இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து குதித்து தப்பித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெச்சன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோஸ்டாரிகாவில் விபத்து- 6 பேர் பலி

முன்னதாக, மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகாவின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.

ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப் பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.

முன்னதாக, குஜராத்தில் விமானங்கள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்றார். அங்கு டிசம்பர் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் ராஜ்கோட் நகரின் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வீடுகள் உள்ளிட்ட பல நலதிட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.

ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பொறியியல் தொழிற்சாலையை பாராட்டி பேசிய மோடி, விரைவில் குஜராத்தில் விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் கூறினார். சில தலைவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தங்களுக்கென்று பங்களாக்கள் கட்டிக் கொண்டார்கள், ஆனால் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று யாரையும் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Slams Stalin: “ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
“ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
Min. Periyakaruppan on RBI Rules: கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Slams Stalin: “ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
“ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
Min. Periyakaruppan on RBI Rules: கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Embed widget