ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம் - முழு விவரம் இதோ
திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள்
திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) வருகிற 1-ந்தேதி முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.
அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) 1-ந்தேதியன்று விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.
மேலும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.05 மணிக்கு புறப்படும். அதுபோல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும். புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) வருகிற 1, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22675) 2, 3, 4 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்களும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்- புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051), குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16128) 1-ந்தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















