மேலும் அறிய

வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்

’’அகழியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழி கால்வாயை இனிவரும் காலங்களில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை'’

தண்ணீரில் மிதக்கும் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயம். அரசர்களின் ஆட்சிக் காலத்திலும் சரி, ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவின் ஆட்சி காலத்திலும் சரி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வரலாற்று சிறப்புகளையும், பதிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகழியுடன் கூடிய வேலூர் தரைக்கோட்டை. வேலூர் மாநகரின் மத்தியில் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் அழகிய அகழியுடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வேலூர் தரைக்கோட்டை கோட்டை.  வேலூர் கோட்டையின் உள்ளே உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 16 அடி ஆழம் கொண்ட கோட்டை அகழியில் அண்மைக் காலங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அகழியின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.  16 ஆம் நூற்றாண்டின் போது ஆண்டு படி 1526 முதல் 1595 வரை விஜயநகரப் பேரரசின் கீழ் வேலூரை ஆண்ட சிற்றரசரான சின்ன பொம்மு நாயக்கரால் வேலூர் அகழிக்கோட்டை கட்டப்பட்டது. அப்போது தான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தற்போது உள்ளது போல விரிவாக்கம் செய்யப்பட்டது. 
 

வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்
 
அதற்குமுன் சம்புவராயர்கள் காலத்தில் சிறியதாக இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் கோட்டை விரிவாக்கத்தின் போது சிற்றரசர் சின்ன பொம்மு நாயக்கர் விரிவுபடுத்தினார். இந்தியாவில் தற்போது உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 2000 கோட்டைகளில் சிறந்த கோட்டையாக 7 கோட்டைகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதில் ஒன்றாக அகழியுடன் கூடிய வேலூர் தரைக்கோட்டை கோட்டை திகழ்கிறது.  வரலாற்றில் இடம்பிடித்துள்ள கோட்டை ஜலகண்டேஷ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ள இந்த நிகழ்வை கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு பார்த்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கோவில் வளாகத்திற்குள் தேங்கும் தண்ணீர் கோட்டை அகழியில் சென்று விழுமாறு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோட்டை அகழியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் உயர்ந்து வருவதால் வடிகால் கால்வாயின் வழியாக அகழி நீர் கோட்டைக்குள் வருகிறது, மற்றொருபுறம் கோவிலுக்குள் இருக்கக்கூடிய தாமரைக் குளம் மற்றும் கிணறு ஆகியவற்றில் நீர் நிரம்பி வழிவதால் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. 
 

வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்
 
மேலும் வேலூர் கோட்டை அகழியில் நீர் உயரும் போது அதன் உபரி நீர் வெளியேறி பாலாற்றில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தற்போது அது முறையாக பராமறிக்கப்படாததால் அதில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அகழியின் உபரி நீர் வெளியேற முடியாமல் கோட்டை கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அகழியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழி கால்வாயை இனிவரும் காலங்களில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஜலத்திற்க்கு மத்தியில் ஈஸ்வரன் லிங்க வடிவில் இருப்பதால் இக்கோவிலில் உள்ள மூலவருக்கு ஜலகண்டேஸ்வரர் என பெயர் புழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் மூலவர் அமைந்துள்ள சன்னிதியில் நீர் இருப்பதாகவும், அதன் மீதே லிங்க வடிவான ஜலகண்டேஸ்வரர் அருள்பாலித்து வருவதாகவும் பொதுமக்கள் கருதுகிறனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget