மேலும் அறிய

கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டிலால் சரமாரி குத்தினர்.

ஆற்காடு அருகே அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்த தனியார் பஸ் கண்டக்டரை , 5 பேர் கொண்ட கும்பல் கோயில் வாசலிலே வைத்து பீர் பட்டலால் குத்தி கொலை செய்துள்ளனர் . அவரை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பாவையும் பீர் பாடலால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நெல்லியம்மன் கோவில் உள்ளது , நேற்று ஆடி செவ்வாய் கிழமையை  முன்னிட்டு இங்குள்ள  நெல்லியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டது .

நெல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு , நேற்று மதியம் கூழ் வார்த்தல் திருவிழாவும் , இதனை தொடர்ந்து இரவு , நெல்லியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதில் இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது , சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (வயது 30 ) என்பவர் , தனது நண்பர்களான ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசு (35) கேசவன்(36) ஹேம பிரசாத் (35) மற்றும் ஹரிஷ் (29) உள்ளிட்ட நாள் வரை அம்மன் திருவீதி உலாவிற்கு அழைத்து வந்துள்ளார் . 

அப்பொழுது கிரிவசன் உட்பட 5 பேரும் மது போதையில் இருந்துள்ளனர்.  மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தின் முன் குத்தாட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்ட ஊர் பெரியவர்கள்  போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்து அனுப்பிவைத்தனர் . சாமி ஊர்வலத்தில் இருந்து களைந்து வந்த கிரிராசன் மட்டும் அவரது நண்பர்கள்  , கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த , தனியார் பஸ் நடத்துனரான நாகேந்திரன் (30 ) அவர்களை தட்டிக்கேட்டுள்ளார் . ஏற்கனவே கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டலால் , சரமாரியாக தாக்கியுள்ளனர் . நாகேந்திரனை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பா ரகுவரன் (45 ) என்பவரையும் பீர் பட்டில்களால் தாக்கினர்  .

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப் பகுதிக்கு ஓடிவந்த சர்வந்தாங்கல் பகுதி மக்கள் மது போதையில் இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து ஒரு வீட்டினுள் அடைத்து வைத்தனர் . பின்பு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த நாகேந்திரன் மட்டும் ரகுவரனை , ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர் , அங்கே நாகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் காயம் அடைந்த ரகுவரனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இந்நிலையில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டியப்பன் தலைமையிலான போலீசார் கிரிவாசன்  , அன்பரசு , கேசவன் , ஹேமா பிரசாத் மற்றும் ஹரிஷ் ஆகிய 5  பேரையும் கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

கொலை செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் நாகேந்திரனுக்கு திருமணம் நடைபெற்று , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

தலைப்பு செய்திகள்

Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget