மேலும் அறிய

திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து  வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்

தெருநாய் கடித்ததில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் காயம். மருத்துவமனையில் அனுமதி. நாய்களை பிடிக்க நடவடிக்கை வேண்டும் என பெற்றோர் கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது பெரியாங்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடங்கப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியாங்குப்பம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தமிழரசன் இவரது மகன் உதயநிதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றோருவரின் மகளான மாணவி நவியா இருவரும்  பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.


திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து  வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்து வந்த தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தல் கடந்த சனிக்கிழமை இப்பள்ளி வேலை நாளாக செயல்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை காலை தாங்கள் பயிலும் தொடக்கப்பள்ளிக்கு சென்ற மாணவன் உதயநிதி, மாணவி நவியா இருவரும் சக மாணவர்களோடு சேர்ந்து தங்களது வகுப்பறையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  வகுப்பறைக்குள் புகுந்த தெரு நாய்களில் ஒன்று அங்கு விரையாடிக்கொண்டிருந்தவர்களை கடித்துள்ளது. நாய் கடித்ததில் மாணவன் உதயநிதி, மாணவி நவியா ஆகிய இருவருக்கும் கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் கடி காயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்களும், பொது மக்களும் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் மீட்டு, அச்சமயம் அப்பகுதிக்கு அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் இருந்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தங்களிடம் இதற்க்கான போதிய சிகிச்சை மருந்துகள் இல்லை என்றும் உடனே மேல்சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்ட பின் அங்கும் மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் இன்று (டிச 13) தான் மருத்துவர்கள், நாய் கடித்து படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கத்தொடங்கியுள்ளனர்.


திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து  வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்

இது குறித்து நாய் கடித்து பதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான தமிழரசன் கூறுகையில், எனது மகன் உதயநிதி பெரியாங்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சனிக்கிழமை (டிச 11) காலை 9.00.மணிக்கு பள்ளிக்கு சென்றவனை 10.00 மணிக்கு பள்ளியில் சுற்றிய தெரு நாய்கள் கடித்துள்ளது. அப்போது அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த நர்சுகள் யாரும் முதலுதவிகூட அளிக்கவில்லை. பின்னர் எனது மனைவி கூறியதை அடுத்து வீட்டுக்கு சென்ற நான் எனது மகனை மீட்பு ஆம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். இங்குமே உரிய சிகிச்சை அளிக்கவில்லை. பள்ளி ஆசிரியர்களை வரச்சொல்லி ஊசிகூட போடாமல் காலதாமதப்படுத்தினர். எனது மகள் ஆபத்தான நிலையில் உள்ளான். இது குறித்து இதுவரை எனது படிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரோ, எங்களது ஊராட்சி மன்ற தலைவரோ யாருமே வந்து நேரில் கூட பார்க்கவில்லை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை என குற்றம்சாட்டினார். 


திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து  வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்

மேலும் இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு அருகில் கும்பல் கும்பலாக தெருநாய்கள் சுற்றித்திரிவதாகவும். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும். இது குறித்து ஏற்க்கனவே புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததான் விளைவே இன்று இரண்டு பள்ளி மாணவர்கள் காயம் அடைய காரணமாய் அமைந்துள்ளது.


திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து  வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்

ஆகவே இனியாவது பள்ளி நிர்வாகவும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து துவக்கப்பள்ளி அருகில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பெரியாங்குப்பம் மேல் காலணியை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget