மேலும் அறிய

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

முதல்வரின் அனுமதி பெற்று முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுசெய்து மற்றும் குறைகள் குறித்தும் பணிகளை  கேட்டு அறிந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில்  இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களின் வளர்ச்சிப்பணிகள், சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை,  சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரியத் துறை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது அதில் ஒருவர் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சென்ற வருடம் கொரோனா தொற்றால் தேர்கள் எதுவும் இழுக்கப்படவில்லை, இந்த வருடம் கோவிலின் பெரிய தேர்கள் இழுக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து கூட்டத்திற்கு இந்த நிகழ்வில் தலைமை ஏற்று  பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உள்ளேயே காலை மற்றும் இரவு வேளைகளில் சாமி ஊர்வலம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிக்க வேண்டும் என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேணடும் என்ற கோரிக்கை முன்வைத்தார்

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு பேசுகையில்;

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு யானை இல்லாமல் உள்ளது. உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,  அதே போன்று அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்ட கடைகளுக்கு கடை வாடகை குறைக்க வேண்டும் ,அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு சில வருடங்களுக்கு முன்பு இருந்த கட்டிடங்கள் தீயினால் கருகி சேதம் அடைந்து தற்போது காலியாக உள்ளது அந்த இடங்களில்  புதியதாக கட்டிடங்கள் கட்டி கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி செய்தி  வேண்டும் என்றும், ஐயன்குளத்தை தூர்வார வேண்டும் என்றும், பழனி என்றால்  பஞ்சாமிர்தம் , திருப்பதி என்றால் லட்டும் இலவசமாக வழங்குவது போல  அதேபோன்று அருணாச்சலேஷ்வரர் கோவிலில் புளியோதரை சாதம் அல்லது கற்கண்டு சாதம் ஏதாவது ஒன்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், பெருமாள் கோவில்களில் ஒலிபெருக்கியின் மூலம் சுப்ரபாதம் நாமம் பாடுவதைப் போல  அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என ஒலிபெருக்கியின் மூலம் முழங்க வேண்டும் என்றும், கோவில் உள்ளே வந்து செல்லும் பக்தர்கள் தங்களுடைய இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது, அதனை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் கழிவறை கட்டித்தர வேண்டும்.  

மற்றும்   அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் புகைப்படம்  பொரித்த காலண்டர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கிட  வேண்டியும், திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக  பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்கள்  பருவதமலைக்கு செல்கின்றனர். அங்கு  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வருகின்றனர் அதனால்  பருவத மலை கோவிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர  வேண்டியும், அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில்  இந்து சமய அறநிலைத்துறை சார்பில்   கலைக்கல்லூரி ஒன்று அமைய உள்ளது  அந்த கலைக்கல்லூரியில் சிற்பக் கல்லூரி,அர்ச்சகர்  மற்றும் ஓதுவார்,   சிற்பக்கலை போன்ற  வகுப்பு  இடம் பெற வேண்டும் என்றும் அதனை பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்றும்   போன்ற  கோரிக்கைகளை முன்வைத்தனர். 

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

 

அதன் பிறகு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியபோது ;

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்  உள்ள கோவில்களுக்கு 84 கோடி ரூபாய் பணிகள் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. அதிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர்  கூறிய அனைத்து கோரிக்கைகளையும்  காலதாமதமின்றி அனைத்தையும் நிறைவேற்றி தரப்படும் என்றும் உறுதியளித்தாரர் அதனைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து   விவாதிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை மற்றும்  முதல்வர் பொது நிவாரண நிதி அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 56 பயனாளிகளுக்கு 55 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 19ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து குறைந்து கொண்டு வருவதாகவும், தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு முதல்வரின் அனுமதியைப் பெற்று முடிவெடுக்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகள் விரைவில் அதிரடியாக அகற்றப்படும் என்றும் கூறிய அவர் கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்கள் காண மின்கட்டணத்தை அறநிலையத்துறை ஏற்கும் என்றும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
ஒரே நாளில் 525 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!
ஒரே நாளில் 525 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!
Breaking News LIVE: கனமழை எதிரொலி - நீலகிரியில் உள்ள 2 தாலுகாக்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
Breaking News LIVE: கனமழை எதிரொலி - நீலகிரியில் உள்ள 2 தாலுகாக்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
Embed widget