மேலும் அறிய

Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..?

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள், பாதுகாவலர் இடையே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளது. போலீஸின் தீவிர விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தெரியவரும்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முதல் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று காலை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது, ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோயில் செக்யூரிட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் செக்யூரிட்டிகளும், ஐயப்ப பக்தர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சென்னாராவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.


Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..?

இதனை தொடர்ந்து, அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். இதைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் கோபம் அடைந்து கூச்சலிட்டனர். அதையடுத்து, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கோயில் செக்யூரிட்டிகள் பரத் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதே போல கோயில் செக்யூரிட்டிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட பெருவிழா திரு நெடுந்தண்டகம் உற்சவத்துடன் இன்று இரவு துவங்கவிருந்த நிலையில் இந்நிகழ்வு அபசகுணமாக கருதப்படுகிறது. அதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..?

 

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறிய விளக்கம்.. இன்று காலை சுமார் 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில், ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள், உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியைப் பிடித்து, அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். எனவே ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தட்டி கேட்ட காவலரையும் ‘போலீஸ் டவுன் டவுன்' என்று கோஷம் எழுப்பினார்கள். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல், இடையூறு செய்ததால் உடனே காவல்துறையில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா பக்தர்கள் தரப்பில் தெரிவித்த விளக்கம்.. 

நாங்கள் ஆந்திரா, கர்நாடக ஆகிய பகுதிகளில் இருந்து , 30 க்கும் மேற்பட்டோர் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தோம். அப்போது நீண்ட நேரமாக மக்கள் அனைவரும் வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் கோயில் பாதுகாவலர்கள் ஒரு சில நபர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய தனி வழியே அழைத்து சென்றனர். அதனை நாங்கள் தட்டி கேட்டோம், அப்போது பாதுகாவலர்கள் தகாத வார்த்தையால் மரியாதை இல்லாமல் பேசினார்கள். இதனால் வாக்குவாதம் பெரிய அளவில் ஏற்பட்டு பின்பு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

இந்த நிலையில், இரு தரப்பிடமும் சமரசம் செய்து கொள்ளுமாறும், பிரச்னை எதுவும் வேண்டாம் எனவும் காவல்துறை கடிதம் எழுதி வாங்கி கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
"ஆட்சி அமைக்கவே முடியாது!" - இண்டியா கூட்டணிக்கு 'முற்றுப்புள்ளி' ... புதுச்சேரி அரசியலை அலறவிட்ட அண்ணாமலை!
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Embed widget