Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Trichy power cut (20-05-2026): திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 20, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
காட்டுப்புத்தூர்
நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், ஆணைகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம்.
கொளக்குடி
பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்
தொட்டியம்
பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீனிவாசநல்லூர் ,ஏரிகுளம்,வரதராஜபுரம், வல்வேல்புதூர் ,முதலிப்பட்டி,உடையகுளம்புதூர் தலைமலைப்பட்டி காரைக்காடு , ஏலூர்பட்டி.
மணிகண்டம்
ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, ஹவுசிங் போர்டு, பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்றல் நகர், அம்மையப்பா நகர், திரண்மாநகர்
பூவாளூர்
லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பிரிமையக்குடி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















