மேலும் அறிய

பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

பாதையில் சிதறிக் கிடக்கும் கூர்மையான கற்களும் முட்களும் பக்தர்களின் பாதங்களைக் குத்திப் பதம் பார்ப்பதால், ஒவ்வொரு அடியையும் ரண வேதனையுடனேயே எடுத்து வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை கிரிவலப் பாதையில் பராமரிப்பின்றி உள்ள சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் குத்தி பக்தர்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை உடன் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, 'தென் திருப்பதி' என்று போற்றப்படும் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்திருக்கும் பெருமாள் மலை, ஆன்மீக அன்பர்களின் முதன்மைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாகப் பௌர்ணமி தினங்கள் மற்றும் புரட்டாசி விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து எம்பெருமானை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த புனிதமான கிரிவலப் பாதை தற்போது முற்றிலுமாகச் சிதைந்து, பக்தர்களின் நிம்மதியைப் பறிக்கும் களமாக மாறியிருப்பது மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளாய் குத்தும் ஜல்லி கற்கள்... வழுக்கி விழ வைக்கும் சேறு!

பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிரிவலப் பாதையின் பெரும்பகுதி, பராமரிப்பின்றி ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பெரிய பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. கிரிவலம் வரும் பெரும்பாலான பக்தர்கள் காலணிகள் இன்றி வெறும் கால்களிலேயே நடப்பதே ஆன்மீக வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், பாதையில் சிதறிக் கிடக்கும் கூர்மையான கற்களும் முட்களும் பக்தர்களின் பாதங்களைக் குத்திப் பதம் பார்ப்பதால், ஒவ்வொரு அடியையும் ரண வேதனையுடனேயே எடுத்து வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மழை பெய்யும் நேரங்களில் இந்தச் சிறு பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் முதியவர்களும் பெண் பக்தர்களும் வழுக்கி கீழே விழுந்து காயமடையும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

கும்மிருட்டில் மூழ்கும் பாதை... விஷ பூச்சிகளால் அச்சுறுத்தல்!

பக்தர்கள் பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும், வெயில் தணிந்த இரவு நேரங்களிலுமே அதிகளவில் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், இந்தச் சமயத்தில் கிரிவலப் பாதையில் பயணப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

பாதையோரம் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாகப் பழுதடைந்து எரியாமல் கிடப்பதால், கிரிவலப் பாதை முழுமையாக இருளில் மூழ்கிப் போகிறது. மலை அடிவாரப் பகுதி என்பதால் இருளைப் பயன்படுத்திப் பாம்புகள், தேள்கள் போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. வெளிச்சம் இல்லாததால் எங்கே கால் வைப்பது என்று தெரியாமல், பக்தர்கள் ஒவ்வொரு கணமும் அச்சத்தோடு கிரிவலம் வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீரும் இல்லை... கழிவறை வசதியும் இல்லை

ஆன்மீக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில், கிரிவலம் வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிப்பதற்கோ அல்லது சற்று நேரம் ஓய்வெடுப்பதற்கோ போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லை. கிரிவலப் பாதையின் நெடுகிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளோ, சுத்தமான பொதுக் கழிப்பிட வசதிகளோ இல்லாததால், குறிப்பாகப் பெண் பக்தர்களும் முதியவர்களும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

முறையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், பாதையோரம் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஆன்மீகச் சூழலின் தூய்மை கெட்டுச் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?

துறையூர் பெருமாள் மலை கிரிவலப் பாதையை உடனடியாகச் சீரமைத்துத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.

வெறும் காலில் நடக்கும் பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, கூர்மையான கற்கள் இல்லாத வகையில் தார்ச் சாலையாகவோ அல்லது தரமான பேவர் பிளாக் (Paver blocks) பாதையாகவோ மறுசீரமைக்க வேண்டும்.

கிரிவலப் பாதை முழுவதையும் வெளிச்சமாக்கும் வகையில் புதிய மின்விளக்குகளையும், ஆபத்தான வளைவுகளில் உயர் கோபுர விளக்குகளையும் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளிகளில் குடிநீர் மையங்களை அமைத்து, முறையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகமும் அறநிலையத்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தர்களின் பாதுகாப்பையும் ஆன்மீக உணர்வுகளையும் மதித்து, இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து, கிரிவலப் பாதையை முழுமையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்!

Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget