மேலும் அறிய

Trichy gun shoot: திருச்சியில் காவல்துறையினருக்கு அரிவாள் வெட்டு..2 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன?

திருச்சியில் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நகைகளை மீட்க, காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அபோது, உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, போலீசாரின் ஜீப்பில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். துரத்திப்பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ரவுடிகள் அரிவாளால் தாக்கியதில், காவலர் சிற்றறசு என்பவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.  தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக, காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு  தகவல் வந்துள்ளது . அதனை அடுத்து துரை, சோமு, அனுராதா மற்றும் ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  தீவிர விசாரணையில் உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே, அதிகளவில் கஞ்சாவை  பதுக்கி வைத்துள்ளோம் என கூறி காவல்துறையினரை அந்த நான்கு பேரும் அழைத்துச் சென்றனர்.

தாக்குதலும்.. துப்பாக்கிச்சூடும்..

குறிப்பிட்ட கோயில் அருகே சென்றதும் திடீரென்று துரை மற்றும் சோமு ஆகியோர், தாங்கள் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அந்த இரண்டு பேர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து காயமடைந்த காவல்துறையினர்,  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர்  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றப்பின்னணி:

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள் ஆவர். துரைசாமி மீது கஞ்சா கடத்தல்,கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும்,  தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget