மேலும் அறிய

வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் பல வருடமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கட்சியின் பொன்மலைப்பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் பாய் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.


வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

இதுகுறித்து போராட்ட குழுவினர் கூறும்பொழுது, இந்த விஷயத்தில் முடுக்குப்பட்டி இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தெரியவந்து உள்ளது. எனவே இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எதுவும் கூடாது. 120 குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது. வேறு இடம் கொடுத்தாலும் நாங்கள் அதனை வாங்க மாட்டோம். இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று கூறினார்கள். மேலும் இந்த முற்றுகை போராட்டத்தில் முடுக்கு பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்து, ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

இதையடுத்து திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க சென்றனர். அங்கு அந்த மனுவை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முடுக்குப்பட்டி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென ரெயில்வே நிலையத்திற்குள் புகுந்து, முதல் பிளாட்பாரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டதை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Tata Altroz iCNG Review: கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
TASMAC Holiday: தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget