மேலும் அறிய

வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் பல வருடமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கட்சியின் பொன்மலைப்பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் பாய் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.


வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

இதுகுறித்து போராட்ட குழுவினர் கூறும்பொழுது, இந்த விஷயத்தில் முடுக்குப்பட்டி இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தெரியவந்து உள்ளது. எனவே இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எதுவும் கூடாது. 120 குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது. வேறு இடம் கொடுத்தாலும் நாங்கள் அதனை வாங்க மாட்டோம். இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று கூறினார்கள். மேலும் இந்த முற்றுகை போராட்டத்தில் முடுக்கு பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்து, ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

இதையடுத்து திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க சென்றனர். அங்கு அந்த மனுவை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முடுக்குப்பட்டி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென ரெயில்வே நிலையத்திற்குள் புகுந்து, முதல் பிளாட்பாரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டதை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
Trichy power cut : திருச்சியில் நாளை(11-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள்! இதோ லிஸ்ட்
Trichy power cut : திருச்சியில் நாளை(11-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள்! இதோ லிஸ்ட்
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget