மேலும் அறிய

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது.

கொள்ளிடம் தடுப்பணை 1836ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது. 45 மதகுகள் ஒரு பிரிவாகவும், 10 மதகுகள் இன்னொரு பிரிவாகவும் மொத்தம் 55 மதகுகளுடன் இது உருவாக்கப்பட்டது. காவிரியில் மழை காலங்களில் மிக அதிக வெள்ளம் வரும்போது கொள்ளிடத்தின் வழியாக உபரிநீரை வெளியேற்றவும், மற்ற காலங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்காவும் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகத்திலும், கேரளத்திலும் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் உபரிநீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு விடப்பட்டது. மேட்டூர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நிரம்பியது. அதன் பிறகும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்தது. அதை அப்படியே மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டனர். இந்நிலையில் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில்வினாடிக்கு 2.4 லட்சம் கனஅடி சென்றது. இந்த வெள்ளத்தை காவிரி தாங்காது என்பதால் காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியை மட்டும் வெளியேற்றிவிட்டு 2.1 லட்சம் கனஅடி தண்ணீரை கொள்ளிடம் வழியாக வெளியேற்றினர்.

தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேல் 1 லட்சம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டதால் கடந்த ஆண்டு இதே நாளில்(22.8.2018) இரவு 8 மணி அளவில் கொள்ளிடம் தடுப்பணை உடைந்து போனது. ஆனால் உடைப்பு ஏற்பட்டபோது கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் சென்றது. 45 மதகுகள் கொண்ட தடுப்பணையில் 5 முதல் 13 வரை உள்ள மதகுகள் வெள்ளத்தில் அடைத்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதோ என்ற  அச்சமான சூழ்நிலையில் இருந்தார்கள்.


திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இதனை தொடர்ந்து பழைய அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணையும் ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச்சூழலில், கர்நாடகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கிடைக்கும் உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் கொள்ளிடத்தில் பிரித்து அனுப்புவதில் தற்காலிக காப்பணை இடையூறாக உள்ளது. புதிய கதவணை இல்லாத தருணங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த தற்காலிக காப்பணையானது, புதிய கதவணை கட்டப்பட்ட பிறகு இடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், சேதமடைந்த கதவணையில் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், சேதமடைந்த பகுதியில் மதகு எண் 4 முதல் 16 வரையில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக காப்பணையில் ஷட்டர்கள் கிடையாது. முழுவதும் கான்கீரீட் கட்டமைப்புதான். எனவே, வெள்ள நீரை தேக்கி வைத்து தேவையான தருணங்களில் வெளியேற்ற முடியாது. வெள்ளக் காலங்களில் காப்பணை இடையூறாவே உள்ளது. எனவே, இதனை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அரசின் ஒப்புதல் பெற்று, காப்பணை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.


திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக காவிரி கதவணையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்களையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கதவணையில் உள்ள 41 கதவணைகளையும் புனரமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கொம்பு மேலணையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நீர்வளத் துறையின் திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் பி. முருகானந்தம், மேலணை உதவி பொறியாளர் பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
Embed widget