மேலும் அறிய
திருச்சி லால்குடி அருகே 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு .. காரணம் என்ன?
லால்குடி அருகே உள்ள 4 கிராமங்களில் மார்ச் 8 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை
திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், கீழ் அன்பில், அன்பில் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவானது இன்று முதல் மார்ச் 8 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜங்கமராஜபுரம் ஆச்சிராமவள்ளி அம்மன் கோயில் மாசி தேர் விழாவில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
ஐபிஎல்























