மேலும் அறிய

Republic Day : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு - போலீஸ் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 8.05 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார். குடியரசு தினத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் நேற்று பகல் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உைடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விடுதிகள் போன்றவற்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர, சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

 


Republic Day : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு - போலீஸ் தீவிர சோதனை

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு :

குடியரசு தின விழாவையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவி கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன் பின் விமான டிக்கெட் ஆய்வு செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். தொடர்ந்து சுங்கத்துறையினர் சோதனை செய்தபின்பு விமானத்தில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மோப்பநாய் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Embed widget