மேலும் அறிய

தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது மாமியார், மாமனார் தாக்குதல் - பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு நேற்று காலை 8.30 மணியளவில் சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மங்கையற்கரசி, வீட்டில் இருந்த தனது கணவர் வினோத்குமார், மாமனார் பெருமாள், மாமியார் கமலா, நாத்தனார் செல்வி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வி தனது வீட்டின் முன்பு ஏன் பிரச்சினை செய்கிறாய் என்று கேட்டு, அருகில் இருந்த கல்லை எடுத்து மங்கையற்கரசியின் தலையில் அடித்ததாக தெரிகிறது.

இதில் மங்கையற்கரசியின் முன்பக்க தலையின் இடதுபுறம் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கமலா காலணியாலும் (செருப்பு), பெருமாள் கைகளாலும் மங்கையற்கரசியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இனி அங்கு வரக்கூடாது என்று கூறி அவர்கள் மங்கையற்கரசியை விரட்டி உள்ளனர். அப்போது அருகில் இருந்த வினோத்குமார் அது பற்றி எதுவும் கேட்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு தலையில் 2 தையல் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது மாமியார், மாமனார் தாக்குதல் - பெரம்பலூரில் பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மங்கையற்கரசியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள பில்லாத்துறையை சேர்ந்த பெற்றோரை இழந்த மங்கையற்கரசிக்கும், பெரம்பலூரை சேர்ந்த வினோத்குமாருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு வினோத்குமாரும், மங்கையற்கரசியும் துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சிறிய, சிறிய பிரச்சினைகளின் காரணமாக பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வினோத்குமார் தனது தங்கை செல்வியின் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்கையற்கரசி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது வினோத்குமார் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மங்கையற்கரசி தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தான் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றுக்கொள்வதாகவும் கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில் மங்கையற்கரசி நேற்று காலை வினோத்குமாரின் தங்கை செல்வி வீட்டிற்கு சென்று மீண்டும் தான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் எனக்கூறி, அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே வினோத்குமார், தன்னை தனது மனைவி மங்கையற்கரசி அடித்ததில் காயம் ஏற்பட்டதாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget