பஞ்சப்பூரில் அடுத்த பிரம்மாண்டம்.. கத்திப்பாராவுக்கு டஃப் கொடுக்கும் புதிய மேம்பாலம்
பரபரப்பான திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH) போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் வகையில், திருச்சி பஞ்சப்பூரில் புத்தம் புதிய க்ளோவர்லீஃப் வடிவில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய ஆறுவழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது.
திருச்சியில் போக்குவரத்து நெரிசல் இருப்பதன் காரணமாக, பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே, திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. எனினும் நெரிசல் காரணமாக, 3வதாக திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த மே 9 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
புதிய மேம்பாலம்:
திருச்சியை சுற்றி பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதத்தில் புதிய மேம்பாலம் மற்றும் சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த முன்மொழியப்பட்ட மேம்பாலம், சென்னையின் புகழ்பெற்ற கத்திபாரா மேம்பாலத்தின் வடிவமைப்பை பிரதிபலிக்கும். இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவடைந்துள்ளது, மேலும் விரிவான திட்ட அறிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
TN Govt is working with NHAI to construct a Kathipara kind cloverleaf interchange at Panjappur, Trichy on Madurai- Trichy NH to cater to the future needs there... #Trichy #Infra 🏗️🛣️ pic.twitter.com/I3bPoLlkRC
— Chennai Updates (@UpdatesChennai) May 18, 2025
இந்த மேம்பால திட்டமானது, வரவிருக்கும் டைடல் பூங்கா மற்றும் பஞ்சப்பூரில் அமைய உள்ள புதிய காய்கறி சந்தை உள்ளிட்ட திட்டங்களின் விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை உள்ளடக்கும் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.
மேம்பாலத்தை நிறைவு செய்வது திருச்சியை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் நான்கு வழி ரிங் ரோடு பகுதியுடன் இணைக்கும்
இந்த திட்டம், இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு முதல் கட்டம் பஞ்சப்பூரில் இருந்து தாயனூர் வழியாக ஜீயபுரம் வரை 19.9 கி.மீ. நீட்டிக்கப்படும், அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் துவக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான பகுதியை உள்ளடக்கி, நான்கு வழி சாலையாக அமைக்கப்படவுள்ளது
இந்த மேம்பால பணிகள் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர்:
பயணிகளுக்கு அத்தியாவசிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், படிப்படியாக பேருந்து நிலையத்தை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், பஞ்சப்பூரில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி சந்தையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 22.1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தையில், மொத்த வியாபாரிகளுக்கான 32 அலுவலக இடங்கள் உட்பட மூன்று தளங்களில் 872 கடைகள் இருக்கும். வசதிகளில் 7,200 சதுர அடி கேண்டீன் மற்றும் வாகனங்களுக்கான போதுமான பார்க்கிங் ஆகியவை அடங்கும்.






















