மேலும் அறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்கால படிமங்கள் கண்டெடுப்பு? - ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் பழங்கால விலங்கினத்தின் முட்டையா? என்பது பற்றி ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்டம் கடந்த 30.9.1995 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் தனி மாவட்டமாக கடந்த 2000-ம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பூர் ஒன்றியம் ஓலைப்பாடி, ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம், காரை, சாத்தனூர், கொட்டரை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளும், அரியலூரை சுற்றியுள்ள காட்டுபிரிங்கியம், பெரியநாகலூர், கிராமங்களிலும் எண்ணற்ற இயற்கை வளங்களும், புவியியல் கனிம வளங்களும் புதையுண்டு கிடக்கின்றன. ஏனெனில் முந்தைய காலத்தில் தற்போதைய அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் கடலில் மூழ்கி இருந்தன. நாளடைவில் கடல் உள்வாங்கியதில், நிலப்பகுதி வெளிப்பட்டது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சாத்திரப்படி கிரிடேசியஸ் காலத்தில் கடலில் புதையுண்ட பகுதியாக திகழ்ந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் கல்மர படிமங்களும், அரியலூர் பகுதியில் சுமார் 7 கோடி ஆண்டுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் போன்ற விலங்கினங்களின் முட்டை படிமங்களும் கண்டெடுக்கப்பட்டு, தற்போது அரியலூர் அரசு சிமெண்டு ஆலை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்கால படிமங்கள் கண்டெடுப்பு? - ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேலும், அரியலூரை சுற்றியுள்ள சில சுரங்கங்களில் கடல்வாழ் உயிரினங்களான நத்தை, நட்சத்திர மீன்கள், ஜெல்லி படிமங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் அவ்வபோது கண்டெடுக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் குன்னம் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள செங்கணான் குளத்தில் பாசில் படிமங்கள் கடந்த ஓரிரு ஆண்டுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செங்கணான் குளத்தில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் உரிய அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர். கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த விலங்கின முட்டை படிமங்கள் போன்று ஒரே மாதிரியாக உருண்டை வடிவிலான படிமங்கள் தற்போதும் கிடைத்து வருகிறது. அந்த படிமங்களை உடைத்து பார்த்தால், நடுவில் முட்டைக்கரு போன்ற தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. அந்த படிமங்களை கனிமவியல் மற்றும் சுரங்கத்துறையினர் எடுத்து வந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், ஆய்வின்போது அவை பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விலங்கினங்களின் முட்டை படிமம் என்பது தெரியவந்தால், அவற்றை பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அமோனைட் படிமங்கள் உள்பட சுமார் 300 கடல் வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமோனைட் மையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget