மேலும் அறிய

பாஜகவின் 9 ஆண்டு சாதனை மக்களை கொன்று குவித்தது தான் - CPI (M) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என கட்டணம் விதிப்பது ஆபத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகளை ஜெயங்கொண்டத்தில் சந்தித்தார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. "இந்த ஆண்டு மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி காவிரியில் இருந்து பற்றாக்குறை காலங்களில் பகிர்வு அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாத நிலையில், தற்போது நிச்சயமற்ற நிலைமை உள்ளது. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்ய முன்வராத பட்சத்தில் தமிழக அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கி இழப்பீட்டை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு பயிர் காப்பீட்டை வழங்க வேண்டும். அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என ஒரு கட்டணம் விதிப்பது மிக மிக ஆபத்து. மின் கட்டணம் உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும். விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை உயர்த்துவோம் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இடுபொருட்கள் விலை 25, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் நெல்லுக்கான ஆதார விலையை 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இது உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் அரசு மெத்தனமாக உள்ளது.


பாஜகவின் 9 ஆண்டு சாதனை மக்களை கொன்று குவித்தது தான் - CPI (M) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
 
மேலும், பா.ஜ.க.வின் 9 ஆண்டு சாதனைகள் என்பது இந்திய மக்களை எவ்வளவு கொன்று குவிக்க முடியுமோ? அவ்வளவு கொன்று குவித்துள்ளனர். அதுதான் அவர்களது சாதனை. இப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அத்திட்டம் நிறைவேறாமல், மீண்டும் நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க தாமதப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நில உரிமையாளரிடம் நிலத்திற்கான பட்டாவினை ஒப்படைக்க வேண்டும்" என தெரிவித்தார்.
 
 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget