மேலும் அறிய

அரிஸ்டோ மேம்பாலம் சில நாட்ளில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வுக்காக தான் உயர் மட்ட பாலம் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கே. என். நேரு

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதில் அரசு விழாக்கள் குறித்த புகைப்படங்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா, தொழில் குழுக்கள், பாரம்பரிய அரிசி வகைகள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தினந்தோறும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் பேசுகையில், “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மண்டலமாக தமிழகம் திகழ்வதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதனை பிரதமர் மோடியும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வேண்டும் என முதலமைச்சர் கேட்டிருக்கிறார். தமிழக கவர்னரின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாக பதில் அளித்து விட்டார். அதைப்பற்றி நான் எதுவும் கூற முடியாது. கவர்னர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்துவிட்டார். அரிஸ்டோ மேம்பால பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் போக்குவரத்து தொடங்கப்படும்.


அரிஸ்டோ மேம்பாலம் சில நாட்ளில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சரின் தனிச்செயலரிடம் பேசியபோது, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்ட வரைவு அறிக்கையை விரைந்து தயார் செய்யுங்கள். திருச்சியை அந்த திட்டத்தின் கீழ் முழுமையாக எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் திட்ட ஆய்வுக்காக தான் உயர் மட்ட பாலம் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பால்பண்னை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் வே சாலைக்கு திட்ட அனுமதிக்காக காத்திருக்கிறோம், திருச்சியில் ரூ.600 கோடியில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல்பார்க்) கொண்டு வர முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆகவே இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா திருச்சியின் வளர்ச்சிக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும். இதற்கு பஞ்சப்பூரில் 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பஞ்சப்பூரில் இருந்து துவாக்குடி அசூர் வரை அசுர வளர்ச்சி ஏற்படும். அதேபோன்று மணப்பாறையில் உணவு பதப்படுத்தும் ஆலை கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள். பஞ்சப்பூரில் இருந்து கரூர் பைபாஸ் சாலை போடுவதற்கு டெண்டர் விடப்பட உள்ளது. இவையெல்லாம் முடிந்தால் திருச்சியும் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறும். அதேபோன்று தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டத்திற்கு தனியாக குடிநீர் திட்டம் கொண்டுவர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் பேசி இருக்கின்றேன். திருச்சியில் புதிய கட்டமைப்புகளை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget