மேலும் அறிய

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

இம்மாதம் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது - திருநாவுகரசர் எம்.பி. பேட்டி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நாடாளுமன்ற ராகுல்காந்தி  பேச்சு மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது. அம்பானி  குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி  எழுப்பினார். மேலும்  மோடியுடன் எங்கு சென்றார், எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அதன் குழுமத்திற்கு நிதி உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள் எல்ஐசி போன்ற பொதுமக்களுடைய பணம் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற கேள்விகள் கேட்டார். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முடியவில்லை பிரதமரோ, நிதி அமைச்சர் யாரும் பதில் சொல்லவில்லை.
இதனால் பாராளுமன்றத்தில் முடக்கினார். பாராளுமன்ற வரலாற்றில் பாஜக அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கி எந்த விவாதம் நடத்தப்படவில்லை. அவர்கள் அதை சாதகமாக விவாதமின்றி  காரியங்கள் நிறைவேற்றி கொண்டார்கள். மேலும் (JPC) ஜாயின்ட் பார்லிமென்ட்ரி  கமிட்டி வேண்டும் என்று எதிர் கட்சிகளும் கேட்டனர். இதில் பாஜக கட்சியினர் தான் தலைவராக இருப்பார். உண்மை வெளிவரும் என்ற காரணத்தால் JPC போட பாஜக பயப்படுகிறது. ராகுல் காந்தி இந்தியாவுக்கு  விரோதமாக பேசினார் என்று சொல்லி, இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை எடுத்து அவருக்கு சாதகமான மாஜிஸ்ட்ரேட்டை  போட்டனர்.  மேலும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள்.


ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

மேலும் அவருடைய ஜனநாயக கடமைக்கு  எதிரான செயல்களில் ஏற்படுத்துகிறது, மட்டுமல்ல எதிர்க்கட்சியில் ஜனநாயகக் குறவளையை ஒடுக்குவதாக உள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனை சட்டரீதியாக சந்திப்போம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக சந்திப்போம். ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட எதிரான நடவடிக்கை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளை மறுநாள் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபடபோகிறது.  அதில் காங்கிரசும் ஈடுபட உள்ளது. மேலும் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது என்றார். 20ம் தேதி  மத்திய அரசு அலுவலகம் முன்பாக  இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் ஒன்றிய,  மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. ஏழு ஆண்டுகளாக கிடைப்பில் போடபட்ட அரிஸ்டோ மேம்பாலம்  தற்பொழுது  பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என முதலமைச்சரிடம் சென்ற ஆண்டு கோரிக்கை வைத்துள்ளோம். நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 600 கோடியில் திருச்சியில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரதமர் இந்தியா முழுவதும் போகும்போது அதை எதிர்த்து போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆர்ப்பாட்டமும் நடத்துவது எங்களது கடமை. முதலமைச்சர் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது அரசாங்கத்தின் கடமை, எங்கள் கடமை நாங்கள் செய்தோம் அரசு கடமையை அவர்கள் செய்தார்கள். இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக எதிராக  காங்கிரஸ் கட்சி தான் நேரடியாக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆகையால் தான்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர், காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைப்பது  கூட்டணிக்கு உதவாது என கூறி வருகின்றனர். ஒரு மாநிலத்தில் தேர்வு நடக்கும் போது அந்த மாநில மொழியில் தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சட்ட பிரச்சனை ஆராய்ந்து தான் அனுப்புவார்கள். ஆனால் ஆளுநர் முதல் கட்டத்திலேயே தடுத்து வைப்பது முறை அல்ல. ஆளுநர் மாநிலத்திற்கு துணையாய் இருக்க வேண்டும் தடையாக இருக்கக் கூடாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Embed widget