மேலும் அறிய

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

இம்மாதம் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது - திருநாவுகரசர் எம்.பி. பேட்டி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நாடாளுமன்ற ராகுல்காந்தி  பேச்சு மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது. அம்பானி  குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி  எழுப்பினார். மேலும்  மோடியுடன் எங்கு சென்றார், எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அதன் குழுமத்திற்கு நிதி உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள் எல்ஐசி போன்ற பொதுமக்களுடைய பணம் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற கேள்விகள் கேட்டார். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முடியவில்லை பிரதமரோ, நிதி அமைச்சர் யாரும் பதில் சொல்லவில்லை.
இதனால் பாராளுமன்றத்தில் முடக்கினார். பாராளுமன்ற வரலாற்றில் பாஜக அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கி எந்த விவாதம் நடத்தப்படவில்லை. அவர்கள் அதை சாதகமாக விவாதமின்றி  காரியங்கள் நிறைவேற்றி கொண்டார்கள். மேலும் (JPC) ஜாயின்ட் பார்லிமென்ட்ரி  கமிட்டி வேண்டும் என்று எதிர் கட்சிகளும் கேட்டனர். இதில் பாஜக கட்சியினர் தான் தலைவராக இருப்பார். உண்மை வெளிவரும் என்ற காரணத்தால் JPC போட பாஜக பயப்படுகிறது. ராகுல் காந்தி இந்தியாவுக்கு  விரோதமாக பேசினார் என்று சொல்லி, இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை எடுத்து அவருக்கு சாதகமான மாஜிஸ்ட்ரேட்டை  போட்டனர்.  மேலும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள்.


ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

மேலும் அவருடைய ஜனநாயக கடமைக்கு  எதிரான செயல்களில் ஏற்படுத்துகிறது, மட்டுமல்ல எதிர்க்கட்சியில் ஜனநாயகக் குறவளையை ஒடுக்குவதாக உள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனை சட்டரீதியாக சந்திப்போம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக சந்திப்போம். ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட எதிரான நடவடிக்கை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளை மறுநாள் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபடபோகிறது.  அதில் காங்கிரசும் ஈடுபட உள்ளது. மேலும் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது என்றார். 20ம் தேதி  மத்திய அரசு அலுவலகம் முன்பாக  இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் ஒன்றிய,  மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. ஏழு ஆண்டுகளாக கிடைப்பில் போடபட்ட அரிஸ்டோ மேம்பாலம்  தற்பொழுது  பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என முதலமைச்சரிடம் சென்ற ஆண்டு கோரிக்கை வைத்துள்ளோம். நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 600 கோடியில் திருச்சியில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரதமர் இந்தியா முழுவதும் போகும்போது அதை எதிர்த்து போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆர்ப்பாட்டமும் நடத்துவது எங்களது கடமை. முதலமைச்சர் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது அரசாங்கத்தின் கடமை, எங்கள் கடமை நாங்கள் செய்தோம் அரசு கடமையை அவர்கள் செய்தார்கள். இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக எதிராக  காங்கிரஸ் கட்சி தான் நேரடியாக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆகையால் தான்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர், காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைப்பது  கூட்டணிக்கு உதவாது என கூறி வருகின்றனர். ஒரு மாநிலத்தில் தேர்வு நடக்கும் போது அந்த மாநில மொழியில் தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சட்ட பிரச்சனை ஆராய்ந்து தான் அனுப்புவார்கள். ஆனால் ஆளுநர் முதல் கட்டத்திலேயே தடுத்து வைப்பது முறை அல்ல. ஆளுநர் மாநிலத்திற்கு துணையாய் இருக்க வேண்டும் தடையாக இருக்கக் கூடாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Embed widget