மேலும் அறிய

பெரம்பலூரில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1861-ம் ஆண்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த தேவாலயம் 8,800 சதுர பரப்பளவில் கட்டப்பட்டது. அப்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. கும்பகோணம் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பழமையான இந்த தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமின்றி, துறையூர் பகுதி தேவாலயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய பழமை வாய்ந்த தேவாலயத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அதன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த தேவாலயம் மூடப்பட்டு, அதற்கு சொந்தமான பள்ளியிலும், மண்டபத்திலும் பிரார்த்தனை நடைபெற்று வந்தது. பின்னர் அந்த தேவாலயம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு சிலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பெரம்பலூரில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிப்பு

மேலும் பழைய தேவாலயம் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேவாலயத்திற்கு சொந்தமான பள்ளியை ஆய்வு செய்ய வந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், புதிய தேவாலயம் பயன்பாட்டில் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், மக்கள் நலன் கருதியும் பழைய தேவாலயத்தை இடித்து அப்புறப்படுத்த தேவாலய பங்குத்தந்தையை அறிவுறுத்தினர். இதையடுத்து பங்குத்தந்தை உத்தரவின்பேரில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, இந்த தேவாலயத்தை என்னால் மறக்க முடியாது. எனது தாத்தா முதல் மகன் வரை நான்கு தலைமுறைகளுக்கு பெயர் சூட்டும் விழா இங்குதான் நடந்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்தானம் இந்த தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் எங்கள் நேரத்தை அதிகம் தேவாலயத்தில் செலவழித்துள்ளோம். தேவாலயம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை இடிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை பொருத்தமட்டில் எங்கள் நினைவில் என்றும் இருக்கும் என்றார். மேலும்  இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இதனை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு ஆகும் என்றார். மேலும் தேவாலயம் என்பது எங்களுடன் இணைந்து இருப்பது தினந்தோறும் காலையில் எங்கள் குடும்பத்துடன் தேவாலயம் சென்று தேவனை தரிசித்தால் எங்களது குடும்பத்தில் எந்த விதமான ஒரு சிக்கலும் இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ்வோம் ,என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. மேலும் எனது தந்தை, தாயுடன் இந்த தேவாலயத்திற்கு சிறுவயதில் இருந்து சென்று உள்ளேன், அங்கு சென்று வரும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையும் தோன்றும்.  இதனைத் தொடர்ந்து எனது குடும்பத்தையும் தினந்தோறும் அங்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தேன். பின்பு  நாளடைவில் தேவாலயம் கட்டிடம் பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு செல்வது குறைந்தது.  தற்போது தேவாலயம் இடிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget