மேலும் அறிய

திருச்சி: மூட்டை மூட்டையாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி! 3400 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

திருச்சி மாவட்டத்தில் 85 மூட்டைகளில் பதிக்கு வைத்திருந்த 3400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி பதுக்கல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள  புகார் தெரிவித்து வருகிறார்கள். 

இதனை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளில திருச்சி மத்திய மண்டலத்தில் ரேஷன் அரிசி பதுக்கல், கடத்தல் சம்பவம் அதிகரித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. 

இதனால் திருச்சி மத்திய மண்டலத்தில் முழுவதும் அதிகாரிகள் தனிப்படைகள் அமைத்து தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனையை  ல்மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி மண்டலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் ஆகிய மாவட்டங்களில், அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். 


திருச்சி: மூட்டை மூட்டையாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி! 3400 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

ரேஷன் அரிசியை கடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் 

இந்நிலையில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று  திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் திருச்சி கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோருடன் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் இனஸ்பெக்டர் ஆகியோர் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

உடனடியாக அதிகாரிகள் ரேஷன் அரசி பதுக்கி வைத்து இருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளில் 3400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரித்த போது, மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஹக்கீம் மகன் அன்வர் பாட்ஷா என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அன்வர் பாட்சாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழுமைக்கபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

மேலும் ரேஷன் அரிசி மற்றும் அதனுடன் வழங்கபடும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கு அரசாங்கள் வழங்குகிறது. 

இதனை சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்ட கூடாது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அரிசியை பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
அமைச்சர் மரிய வில்சன் புதுவை நீதிமன்றம் 'கெடு': ஜூலை 10-ல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!
பட்ஜெட் வேலை இருந்தா என்ன? சனிக்கிழமை கூப்பிட்டும் வரலயா? - தமிழக நிதியமைச்சருக்கு புதுச்சேரி நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை!
Brezza Facelift: டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி.. அப்ப நீங்க யாரு? - தவெகவை பந்தாடிய எழும்பூர் பரந்தாமன்!
அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி.. அப்ப நீங்க யாரு? - தவெகவை பந்தாடிய எழும்பூர் பரந்தாமன்!
Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
Embed widget