மேலும் அறிய

‘ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ‘ - அர்ஜூன் சம்பத்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் வளர்ச்சியை பெருக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த மகளிர் குழுவினர் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 43 பேரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


‘ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ‘ - அர்ஜூன் சம்பத்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மகளிர் குழுவினர், கிராம மக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மக்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.


‘ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ‘ - அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், அதன் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் சுமார் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். சிலர் ஸ்டெர்லைட் ஆலை மீது வீண் வதந்திகளை பரப்பி ஆலையை மூட செய்துள்ளனர். தற்போது அவைகளில் உண்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் வளர்ச்சியை பெருக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


‘ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ‘ - அர்ஜூன் சம்பத்

இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆலை மூடப்பட்டுள்ளதால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். தொழில் வளர்ச்சி பாதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ‘ - அர்ஜூன் சம்பத்

மேலும், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கிராம மக்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை போலீஸார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தடுத்து நிறுத்தினர். ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க செல்ல முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர். 39 பெண்கள் உள்ளிட்ட 43 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை மடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மனு அளிக்க வந்தவர்களை காவல் துறையினர் திடீரென கைது செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வரை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்போம் என கைது செய்யப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget