மேலும் அறிய

தூத்துக்குடி: மழைக்கால நிவாரண தொகை - அரசுக்கு நன்றி கூறும் உப்பள தொழிலாளர்கள்..!

உப்பளத் தொழிலாளர்களுக்கு அரசின் மழைக்கால நிவாரணத் தொகை குறித்தான அறிவிப்பானை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் உப்பளத் தொழிலாளர்கள், ஏபிபி நாடுக்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு தொழில், போதுமான தொழிலாளிகள் இல்லாதது, துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி போன்றவற்றால் குறைந்து வருகிறது.


தூத்துக்குடி: மழைக்கால நிவாரண தொகை  - அரசுக்கு நன்றி கூறும் உப்பள தொழிலாளர்கள்..!

உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு கூடையுடன் தலையில் சுமந்து உப்பு அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது. குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவைகளால் இப்பணிகளை செய்து வந்தாலும் கூட மழை காலம் வந்தால் அதிலும் மண் விழுந்து மூன்று மாத காலம் வேலை இழப்பு என கண்ணீரில் கரைகின்றனர் தொழிலாளிகள். 


தூத்துக்குடி: மழைக்கால நிவாரண தொகை  - அரசுக்கு நன்றி கூறும் உப்பள தொழிலாளர்கள்..!

உப்பள தொழில் பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டுமே நடைபெறும் நிலையுள்ளது. மழை காலங்களில் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கிவிடுவதால் உப்பு உற்பத்தி சுமார் 3 முதல் 4 மாத காலம் நடைபெறுவதில்லை. இந்த மழை காலங்களில் உப்பளத்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் உப்பள தொழிலாளிகளுக்கு மழை கால நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த காலங்களில் உப்பள தொழிலாளிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்காமல் ஏமாற்றியது அதிமுக அரசு என்கின்றனர் உப்பள தொழிலாளிகள். அதே போன்று தற்போதைய தேர்தலின் போது திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் தொடர்பாக ஏபிபி நாடு தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தது.

இந்த தொழிலாளர்கள் மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். இதனால் தொழில் பாதிக்கப்படும் மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மழைக்கால நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு பணி இல்லாத காலங்களில் மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.


தூத்துக்குடி: மழைக்கால நிவாரண தொகை  - அரசுக்கு நன்றி கூறும் உப்பள தொழிலாளர்கள்..!

அதன்படி, தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 8 ஆயிரத்து 465 உப்பள தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு உப்பள தொழில் நடைபெறாத மழைக்காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான மழைக்கால நிவாரண உதவி வழங்கப்பட இருப்பதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


தூத்துக்குடி: மழைக்கால நிவாரண தொகை  - அரசுக்கு நன்றி கூறும் உப்பள தொழிலாளர்கள்..!

உப்பளத் தொழிலாளர்களுக்கு அரசின் மழைக்கால நிவாரணத் தொகை குறித்தான அறிவிப்பானை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் உப்பளத் தொழிலாளர்கள், ஏபிபி நாடுக்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர். தங்களுக்கென தமிழக அரசு தனியான நல வாரியம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Embed widget