மேலும் அறிய

உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

குடிபோதையில் மிளாவைக் கொலை செய்த, வனத்துறையினர் மீது வன விலங்குகளை கொலை செய்தல் குற்றச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி கீழ பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிளா ஒன்று நேற்று இரவு புகுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள்,  பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மிளாவை மீட்டு செல்வதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வராததால் திருச்செந்தூர் தீயணைப்பு துறையினரிடம் கயிறு வாங்கினர்.


உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

பின்னர் அந்த கயிற்றில் சுருக்கு வைத்து மிளா கழுத்தில் மாட்டி பிடிக்க முயன்றனர். அப்போது மிளா பயத்தில் அங்கும் இங்கும் ஓட முயன்றது. இதில் கழுத்தில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியது. பின்னர் மிளாவை வனத்துறையினர் மீட்டு திருச்செந்தூர் வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மிளா கயிறு இறுகியதில் இறந்ததாக கூறப்படுகிறது. வனத்துறையினர் மிளாவை பிடிப்பதற்கு எந்த ஒரு உபகரணமும் கொண்டு வராமல் கயிறு மூலம் பிடித்ததில் கழுத்து இறுகி மூச்சுத்திணறி இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கனிமொழியிடம் கேட்டபோது, மிளா ஒரு மான் வகையைச் சேர்ந்தது இது பொதுமக்களும் மற்றும் மற்ற விலங்கினங்களை பார்த்தால் மிரண்டு ஓடக்கூடியதாகும். இதனால் அது மிரண்டு பயந்த நிலையில் இருந்தது. இன்று அந்த மிளா உயிரிழந்து விட்டது. பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார். தற்போது வனத்துறையினர் கயிறு மூலம் மிளாவை பிடித்துச் செல்லும் வீடியோ  காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமரிடம் கேட்டபோது, மிளா மான் மிகவும் சென்சிட்டிவானது, ஊருக்குள் வந்த தகவல் கிடைத்தவுடன் வன அலுவலர்கள் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களை கண்டவுடன் அச்சத்தில் மானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அவர், வனத்துறையினர் கழுத்தில் கயிறு கொண்டு பிடித்ததாக கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும், உயிரிழந்த மானின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட உள்ளது.  அதனடிப்படையில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இது குறித்து சமூக ஆர்வலரான குணசீலம் வேலனிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையம் அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த மான் வகையைச் சார்ந்த சாம்பார் மான் எனும் மிளா ஒன்று, வழிதவறி நேற்று இரவு சுமார் எட்டுமணி அளவில், உடன்குடி  கீழபஜாரில் உள்ள காம்ப்ளக்ஸ்குள் வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில்,இரவு சுமார் ஒருமணியளவில் மானை பிடிக்க குடிபோதையில் வந்த வனத்துறையினர், மிகச் சாதாரணமாக பிடிக்கக்காமல் குறைந்தபட்சம் வலையை பயன்படுத்தியாவது பிடிக்காமல், சுருக்குக் கயிற்றைப் பயன்படுத்தி மிளாவின் கழுத்தில் மாட்டச்செய்து, கயிற்றை இழுத்து அநியாயமாகக் கொலை செய்தனர்.


உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மதுபோதையில் மிளாவைக் கொலை செய்த, சம்பந்தப்பட்ட வனத்துறையினரை வன்மையாகக் கண்டிப்போம். இந்த கொடூரச் செயலைச் செய்த, பணியின்போது மதுபோதையில் இருந்த சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது, வன விலங்குகளைக் கொலை செய்தல் குற்றச் சட்டத்தின்படி  வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தும், அவர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget