மேலும் அறிய

தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 2 அலகுகளிலும் சேர்த்து 600 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி இருந்தது.

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான என்டிபிஎல் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சி அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் மதுரை மண்டல தொழிலாளர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிட உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, தொழிலாளர்களிள் வேலைநிறுத்த போராட்டம்  5-வது நாளாக நீடித்து வருகிறது.


தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

இந்த போராட்டம் தொடர்பாக என்டிபிஎல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் தான் நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை நேற்று காலையில் வேறு இடத்துக்கு மாற்றினர்.



தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

அனல்மின் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கைகளை தூக்கி பிடித்தவாறு 1 கி.மீ. தொலைவுக்கு நடைபயணமாக சென்று, என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் துறைமுக விருந்தினர் மாளிகை சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் என்டிபிஎல் திட்ட செயலாளர் அப்பாத்துரை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 5-வது நாளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சிஐடியு மாநில செயலாளர் ரசல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


தூத்துக்குடி என்டிபிஎல்  ஒப்பந்த தொழிலாளர்கள் தலையில் நாற்காலிகளுடன் 5வது நாளாக போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 2 அலகுகளிலும் சேர்த்து 600 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி இருந்தது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக என்டிபிஎல் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து என்டிபிஎல் அனல்மின் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget